search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fee reduction"

    • ரெயில்களில் அனுப்பப்படும், பார்சல்களுக்கான கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.
    • பொதுமக்கள் மற்றும் வணிகர்களின் கோரிக்கையை ஏற்று பார்சல்களுக்கான கட்டணம் 286 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

    உடுமலை : 

    பாலக்காடு கோட்டத்துக்கு உட்பட்ட ரெயில்களில் அனுப்பப்படும், பார்சல்களுக்கான கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து பாலக்காடு கோட்ட ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:- மங்களூர் - யஷ்வந்த்பூர்  ரெயில், ஞாயிற்றுக்கிழமை தோறும் காலை 9:15 மணிக்கு கர்நாடகா மாநிலம், மங்களூரில் இருந்து புறப்பட்டு (வழித்தட எண்: 16540) இரவு 8:20 மணிக்கு யஷ்வந்த்பூர் சென்றடைகிறது.

    பொள்ளாச்சி - கோவை ரெயில் ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் காலை 7:25 மணிக்கு பொள்ளாச்சியில் புறப்பட்டு (வழித்தடம் எண்: 06240) காலை 8:40 மணிக்கு கோவை சென்றடைகிறது.

    நீலாம்பூர்- சொர்ணுார், முன்பதிவில்லா தினசரி விரைவு ரெயில் காலை 7 மணிக்கு கேரள மாநிலம், நீலாம்பூரில் (வழித்தடம் எண்: 06466) புறப்பட்டு காலை 8:40 மணிக்கு சொர்ணுார் சென்றடைகிறது.

    சொர்ணுார் - நீலாம்பூர் முன்பதிவில்லா தினசரி விரைவு ரெயில் மாலை, 5:55 மணிக்கு சொர்ணுாரில் புறப்பட்டு (வழித்தடம் எண்: 06473) இரவு 7:35 மணிக்கு நீலாம்பூர் சென்றடைகிறது.

    சர்வத்துார் -- மங்களூரு சென்ட்ரல் முன்பதிவில்லா தினசரி விரைவு ரெயில் கேரளா மாநிலம் சர்வத்துாரில் இருந்து (வழித்தடம் எண்: 06491) முதல் நாள் காலை, 6:10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8:30 மணிக்கு மங்களூர் சென்றடைகிறது.

    கண்ணுார் -சர்வத்துார் முன்பதிவில்லா தினசரி விரைவு ெரயில் கேரளா மாநிலம், கண்ணுாரில் இருந்து மாலை, 5:30 மணிக்கு புறப்பட்டு, (வழித்தடம் எண்: 06469) மாலை, 6:30 மணிக்கு சர்வத்துார் சென்றடைகிறது.

    இந்த ரெயில்களில் ஒரு டன் அளவுக்குள் அனுப்பப்படும் பார்சல்களுக்கு, ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.

    பொதுமக்கள் மற்றும் வணிகர்களின் கோரிக்கையை ஏற்று ஒரு டன் அளவுக்குள் அனுப்பப்படும் பார்சல்களுக்கான கட்டணம் 286 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. குறைக்கப்பட்ட கட்டணம் அமலுக்கு வந்துள்ளது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • பாவு நூல் சப்ளை இல்லாமல் 50 சதவீத விசைத்தறிகள் முடங்கியுள்ளன.
    • மின் கட்டணத்தை ரத்து செய்ய கோரி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

     திருப்பூர்:

    கோவை, திருப்பூர் மாவட்டத்தில் பிரதான தொழிலாக விசைத்தறி ஜவுளி தொழில் உள்ளது. சுமார் 2.5 லட்சம் விசைத்தறிகள் இயங்குகின்றன. நேரடியாகவும், மறைமுகமாகவும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    விசைத்தறி ஜவுளி தொழில் சிறு மற்றும் குறுந்தொழில் என்பதால் 3 ஏ 2 எனும் தனி டேரிப் மற்றும் ஸ்லாப்'முறையில் மின் கட்டணம் கணக்கீடு செய்யப்படுகிறது.இதன்படி முதல் 750 யூனிட் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. ஒப்பந்த கூலி முறையாக கிடைக்காதது, மார்க்கெட் வீழ்ச்சி, உற்பத்தி குறைப்பு, உதிரி பாகங்கள், பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்பட பல்வேறு காரணங்களால் விசைத்தறி ஜவுளி தொழில் நெருக்கடி நிலையில் உள்ளது. மேலும் பாவு நூல் சப்ளை இல்லாமல் 50 சதவீத விசைத்தறிகள் முடங்கியுள்ளன.

    புதிய ஒப்பந்த கூலி கேட்டு விசைத்தறியாளர்கள் சில மாதங்களுக்கு முன் பல்வேறு போராட்டங்களை நடத்தியதால் புதிய கூலி உயர்வு அமல்படுத்த கையெழுத்து ஒப்பந்தமானது.போராட்டங்களை முடித்து புதிய கூலியை எதிர்பார்த்து இருந்த விசைத்தறியாளர்களுக்கு, மின் கட்டண உயர்வு இடியாய் வந்து இறங்கியது. இதன்தொடர்ச்சியாக மின் கட்டணத்தை ரத்து செய்ய கோரி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பினர், மின்துறை அமைச்சரை சந்தித்து உயர்த்திய மின் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தினர்.முதல்வருடன் ஆலோசித்து தீர்வு காணப்படும் என அமைச்சர் உறுதியளித்திருந்தார். இதை நம்பி 8 நாள் வேலை நிறுத்த போராட்டத்தை விசைத்தறியாளர்கள் வாபஸ் பெற்றனர். மின் கட்டணம் குறைக்கப்படும் என்ற நம்பிக்கையில் விசைத்தறியாளர்களும் ஊர் திரும்பினர். .ஆனால் இரண்டு மாதமாகியும் எந்த அறிவிப்பும் வராததால் விசைத்தறியாளர்கள் கடும் விரக்தியடைந்துள்ளனர்.

    இதுகுறித்து சங்க நிர்வாகிகள் கூறுகையில், மின் கட்டணத்தை குறைத்தால் மட்டுமே விசைத்தறிகளை இயக்க முடியும் என்ற நிலையில் உள்ளோம். ஆனால், அரசிடம் இருந்து எந்த அறிவிப்பும் இதுவரை வரவில்லை.கடந்த வாரத்தில் தொழில்துறைக்கு ஓரிரு சலுகைகள் வழங்கியுள்ளனர்.அதில், விசைத்தறி இடம் பெறவில்லை. இரு மாதங்கள் ஆகியும் எந்த அறிவிப்பும் வராததால் ஏமாற்றத்தில் உள்ளோம். அறிவிப்பு வருமா, வராதா என்ற சந்தேகம் அதிகரித்துள்ளது.உடனடியாக நல்ல அறிவிப்பை வெளியிட்டு, விசைத்தறி தொழிலை அரசு பாதுகாக்க வேண்டும் என்றனர்.

    திருப்பூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், சிறு, குறு விவசாயிகளுக்கு போர்வெல் அமைத்து இலவச விவசாய மின் இணைப்பு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு மாவட்ட அலுவலர்களால் ஆய்வு செய்யப்படுகிறது.

    தேர்வு செய்யப்படும் விவசாயிகளுக்கு கூட்டுறவு கடன் சங்கங்கள் வாயிலாக ஒரு லட்சம் ரூபாய் வரை கடன் வழங்க பரிந்துரை செய்யப்படுகிறது.நிலம் அடமானம் அடிப்படையில் கடன் பெற்று போர்வெல் அமைக்கும் விவசாயிகளுக்கு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் இலவச மின்சாரமும், மின் மோட்டார் அமைக்க 50 ஆயிரம் ரூபாய் மானியமும் வழங்கப்படுகிறது.இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து போர்வெல் அமைத்த விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்காமல் 4 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், சிறு, குறு விவசாயிகள் பாசனத்திட்டம் அமைக்க டாப்செட்கோ திட்டத்தின் கீழ் நான்கு ஆண்டுக்கு முன் தேர்வு செய்து கூட்டுறவு கடன் சங்கம் வாயிலாக போர்வெல் அமைக்க கடன் பெற்றோம்.

    கடந்த 3 மாதத்திற்கு முன் பயனாளிகளுக்கு மின் மோட்டார் உள்ளிட்டவை கொள்முதல் செய்ய 50 ஆயிரம் ரூபாய் மானியம் விடுவிக்கப்பட்டது. ஆனால் மின் இணைப்பு வழங்காமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.அரசுத்துறை அதிகாரிகள் ஒருங்கிணைப்பு இல்லாததால், சம்பந்தப்பட்ட துறையிலிருந்து, மின் இணைப்பு வழங்க, ஒதுக்கீடு பெறவில்லை என மின் வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சிறுபான்மையினர் நலத்துறை, மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை மனு அளித்தும் பயனில்லை.

    தற்போது இலவசம் மற்றும் தட்கல் விவசாய மின் இணைப்பு திட்டத்தின் கீழ் மின் இணைப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில் அரசு மானிய திட்டத்தில், இணைந்ததால் மற்ற திட்டங்களின் கீழ் மின் இணைப்பு பெற முடியாத சிக்கலும் உள்ளது.எனவே மாவட்ட நிர்வாகம் டாப்செட்கோ திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

    ×