என் மலர்
நீங்கள் தேடியது "FARMERS TARNA STRUGGLE"
- திருவோடு ஏந்தி விவசாயிகள் தர்ணா போராட்டம்
- கலெக்டரை சந்திக்க விடாததால் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் :
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, கொட்டரை கிராமத்தில் மருதையாற்றின் குறுக்கே நீர்த்தேக்கம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீர்த்தேக்கத்துக்காக கொட்டரை, ஆதனூர் கிராமங்களில் விவசாயிகளிடமிருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டது.
நீர்த்தேக்கத்தின் மறுகரையில் உள்ள நிலங்களுக்கு செல்ல பாதை அமைத்துதரக்கோரி அப்பகுதி விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாநில தலைவர் விசுவநாதன் தலைமையில் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலத்துக்கு திரண்டு வந்தனர்.
அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் 5 பேர் மட்டுமே கலெக்டரை சந்திக்க செல்ல வேண்டும் என தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் மாவட்ட கலெக்டர் அலுவலக போர்டிகோவில் நிறுத்தப்பட்டிருந்த கலெக்டரின் கார் முன்பு அமர்ந்து முற்றுகையிட்டு கைகளில் திருவோடு ஏந்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.






