என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » farmer life sentence
நீங்கள் தேடியது "farmer life sentence"
ஊத்துக்கோட்டை அருகே உறவினர் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் விவசாயிக்கு ஆயுள் தண்டனை வழங்கி திருவள்ளூர் மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஊத்துக்கோட்டை:
ஊத்துக்கோட்டை அருகே உள்ள குருவாயல் கிராமத்தை சேர்ந்தவர் மாணாவாரி ஆனந்தன் (46). விவசாயி. இவர் அதே பகுதியை சேர்ந்த உறவினர் மகளான 4-ம் வகுப்பு மாணவிக்கு கடந்த 10.4.2017-ம் ஆண்டு பாலியல் தொல்லை கொடுத்தார்.
இது குறித்த புகாரின் பேரில் ஊத்துக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணாவாரி ஆனந்தனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை திருவள்ளூர் மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி பரணீதரன் தீர்ப்பு அளித்தார். அதில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் மாணாவாரி ஆனந்தனுக்கு ஆயுள் தண்டனையும், மேலும் 1ஆண்டு காவல் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தார். அபராதத் தொகையை கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை வழங்கப்படும் என்றும் எச்சரித்தார். இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தரப்பில் அரசு வக்கீல் தனலட்சுமி வாதாடினார்.
கோர்ட்டு தீர்ப்பினை தொடர்ந்து ஊத்துக்கோட்டை மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுராதா குற்றவாளி மாணாவாரி ஆனந்தனை கைது செய்து புழல் சிறையில் அடைத்தார்.
ஊத்துக்கோட்டை அருகே உள்ள குருவாயல் கிராமத்தை சேர்ந்தவர் மாணாவாரி ஆனந்தன் (46). விவசாயி. இவர் அதே பகுதியை சேர்ந்த உறவினர் மகளான 4-ம் வகுப்பு மாணவிக்கு கடந்த 10.4.2017-ம் ஆண்டு பாலியல் தொல்லை கொடுத்தார்.
இது குறித்த புகாரின் பேரில் ஊத்துக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணாவாரி ஆனந்தனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை திருவள்ளூர் மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி பரணீதரன் தீர்ப்பு அளித்தார். அதில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் மாணாவாரி ஆனந்தனுக்கு ஆயுள் தண்டனையும், மேலும் 1ஆண்டு காவல் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தார். அபராதத் தொகையை கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை வழங்கப்படும் என்றும் எச்சரித்தார். இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தரப்பில் அரசு வக்கீல் தனலட்சுமி வாதாடினார்.
கோர்ட்டு தீர்ப்பினை தொடர்ந்து ஊத்துக்கோட்டை மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுராதா குற்றவாளி மாணாவாரி ஆனந்தனை கைது செய்து புழல் சிறையில் அடைத்தார்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X