search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "FANS GATHERED"

    • சமீபத்தில் 7 நிலை கொண்ட புதிய ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டு, கடந்த 6-ந்தேதி கும்பாபிஷேக விழா நடைபெற்றது
    • தற்போது கோவிலில் மண்டல பூஜைகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    திருச்சி:

    சக்தி ஸ்தலங்களில் பிரசித்திப் பெற்றது திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில். இந்த கோவிலில் சமீபத்தில் 7 நிலை கொண்ட புதிய ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டு, கடந்த 6-ந்தேதி கும்பாபிஷேக விழா நடைபெற்றது. தற்போது கோவிலில் மண்டல பூஜைகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இதனைத் தொடர்ந்து, பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட பலர் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்து அம்மனை தரிசனம் செய்த வண்ணம் உள்ளனர்.

    இந்நிலையில், நேற்றிரவு, 8 மணிக்கு நடிகர் அஜித்குமார், சாமி தரிசனம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் பரவியது. அதையடுத்து, ஏராளமான ரசிகர்கள் மற்றும் பக்தர்கள் கோவில் பின் வாசலில் அஜித்குமாரை காண ஆவலுடன் திரண்டனர்.

    தகவலறிந்த சமயபுரம் காவல் துறையினர் கூடுதல் போலீசாருடன் பாதுகாப்புப் பணியை தீவிரப்படுத்தினர்.

    ஆனால், இரவு, 9 மணி வரை நடிகர் அஜித்குமார் கோவிலுக்கு வரவில்லை. இதனால் அவரது ரசிகர்கள் மற்றும் பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர்.

    ஆனால் அந்த நேரத்தில் 'பிக்பாஸ்' புகழ், பிரபல திரைப்பட நடிகை யாஷிகா ஆனந்த் கோவிலில் தரிசனம் செய்து விட்டு வெளியே வந்தார்.

    அஜித்குமார் வருவார் என காத்திருந்த ரசிகர்கள், யாஷிகாவை பார்த்து சற்று ஆறுதல் அடைந்தனர். மேலும் அவருடன் செல்பி எடுப்பதற்கு முண்டியடித்தனர். சு

    மார் ஒரு மணி நேரமாக அவரை எங்கும் நகர விடாமல் சூழ்ந்த ரசிகர்கள் மற்றும் பக்தர்கள் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இதனால் கோவில் வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    ×