search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fake gun"

    • உரிமம் பெற வேண்டும்
    • போலீசார் விழிப்புணர்வு

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு அடுத்த அல்லேரி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் அமலாக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் பேபி மற்றும் அணைக்கட்டு சப்- இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில் நேற்று விழிப்புணர்வு கூட்டம் நடைப்பெற்றது.

    விழிப்புணர்வு கூட்டம்

    இதில் கள்ளத்துப்பாக்கி பயன்படுத்துவது குற்றம், யாரும் பயன்படுத்த கூடாது அவ்வாறு பயன்படுத்தினால் போலீஸ் நிலையம் எடுத்து வந்து ஒப்படைக்க வேண்டும். அதைமீறி கள்ள துப்பாக்கி வைத்திருந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அறிவுறுத்தினர்.

    உரிமம் இல்லாதவர்களுக்கு துப்பாக்கியை எப்படி கையாளுவது என்பது தெரியாது இதனால் வேட்டையாடும் போது பல விபத்துக்கள் ஏற்படலாம். இதனால் உயிர் சேதம் ஏற்ப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறினார்கள்.

    எனவே உரிமம் பெற்று துப்பாக்கி பயன்படுத்த வேண்டும். உரிமம் பெறாத கள்ளத்துப்பாக்கியை உடனடியாக காவல்நிலையம் எடுத்து வந்து ஒப்படைக்க வேண்டும் என போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    ×