என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fake child care school"

    வேலைபார்த்த இடத்தில் ஆவணங்களை திருடி குழந்தைகள் பராமரிப்பு பள்ளியை போலியாக நடத்தி வந்த பெண் கைது செய்யப்பட்டார்.
    ஆலந்தூர்:

    மடிப்பாக்கம் ராம் நகரில் தனியார் இன்டர்நே‌ஷனல் குழந்தைகள் பராமரிப்பு பள்ளி மற்றும் குழந்தை பராமரிப்பு ஆசிரியர் பயிற்சி பள்ளி உள்ளது. இங்கு மடிப்பாக்கம் ராம் நகரை சேர்ந்த கிறிஸ்டினா முதல்வராக பணியாற்றி வந்தார்.

    இந்த பள்ளியில் கடந்த 4 மாதமாக ரூ.18 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டது. இதுபற்றி பள்ளி நிர்வாகி திருஞானசம்பந்தம் விசாரணை நடத்தினார்.

    அப்போது முதல்வராக உள்ள கிறிஸ்டினா வேலை பார்த்த இடத்தில் ஆவணங்களை திருடி அதனை மாற்றி அதே பகுதியை சேர்ந்த அனிதா என்பவருடன் இணைந்து தனியாக மடிப்பாக்கம் சீனிவாச நகரில் போலியாக குழந்தைகள் பராமரிப்பு பள்ளி நடத்தி வந்தது தெரிந்தது. மேலும் கிறிஸ்டினா ரூ.2 லட்சம் கையாடல் செய்து இருப்பதும் தெரிய வந்தது.

    இதுபற்றி மடிப்பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது, போலீசார் வழக்குப்பதிவு செய்து கிறிஸ்டினாவை கைது செய்தனர். வங்கி ஊழியர் அனிதாவை தேடி வருகிறார்கள்.
    ×