search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "eyedonation"

    ஒடிசா மாநிலத்தில் இறந்த 24 மணி நேரத்தில் தாய்,மகன் கண்களை குடும்பத்தினர் நான்கு பேருக்கு தானம் செய்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. #eyedonation
    புபனேஷ்வர்:

    ஒடிசா மாநிலம் கன்ஞம் மாவட்டத்தில் உள்ள பெர்கம்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் காமேஷ்வர் ராவ்(47). இவர் அப்பகுதியில் உள்ள பிரண்ட்ஸ் கெல்பிங் கிளப் என்ற அமைப்பின் முன்னாள் தலைவராக இருந்தார். இந்த அமைப்பின் மூலம் கண் தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தார்.

    காமேஷ்வர் ராவின் தாய் பார்வதி கடந்த திங்கட்கிழமை உயிரிழந்தார். மறுநாள் காலை காமேஷ்வர் ராவ் மரணமடைந்தார். இதையடுத்து அவரது குடும்பத்தினர் பார்வதியின் கண்களை தானம் செய்தனர். மறுநாள் காமேஷ்வரின் கண்களை தானம் செய்தனர்.


    பின்னர் அந்த கண்கள் பரிசோதனை செய்யப்பட்டு 4 பேருக்கு பொருத்தப்பட்டது. அதன் மூலம் நான்கு பேர் கண் பார்வை பெற்ற சம்பவம் அப்பகுதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் குடும்பத்தினர் செயலை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். #eyedonation

    ×