என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Explosion and fire"

    • பழங்கள் நாசம்
    • போலீசார் விசாரணை

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த பத்தாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 40). இவர் கடந்த 20 ஆண்டுகளாக மேட்டுப்பா ளையம் பகுதியில் பழக்கடை மற்றும் ஜுஸ் கடை நடத்தி வருகிறார்.

    தீ விபத்து

    இந்த நிலையில் வெங்கடேசன் வழக்கம் போல் நேற்று இரவு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். கடையை பூட்டி சென்ற சிறிது நேரத்திலேயே திடீரென கடை தீ பற்றி எரிந்தது. சிறிது நேரத்தில் தீ மளமளவென கடை முழுவதும் பரவியது.

    அப்போது கடையில் ஜுஸ் போடுவதற்கு பால் காய்ச்ச வைத்திருந்த சிறிய சியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது.

    இதனால் மேலும் தீ அதிகளவில் பரவி கொழுந்து விட்டு எறிந்தது. சிலிண்டர் வெடித்த சத்தம் கேட்டு ஓடி வந்த அந்த பகுதி மக்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றனர்.

    தீயை அணைக்க முடியாததால் இது குறித்து அந்த பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் தீயணைப்பு படை வீரர்கள் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    பழங்கள் நாசம்

    இந்த விபத்தில் கடையில் இருந்த ரூ.80 ஆயிரம் மதிப்பிலான பழங்கள் மற்றும் பொருட்கள் தீயில் கருகி நாசமானது. வாணியம்பாடி விஜயகுமார், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் துரைராஜ் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.

    தீ விபத்தின் போது முன்னெச்சரிக்கை நடவ டிக்கையாக அந்த பகுதியில் மின்சாரம் துண்டி க்கப்பட்டது.

    இதனால் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது. இது குறித்து வாணியம்பாடி தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×