search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Examination Awareness Camp"

    • அருள்ஆனந்த் கல்லூரியில் போட்டி தேர்வு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
    • கல்லூரி துணை முதல்வர் துரை சிங்கம் நன்றி கூறினார்.

    மதுரை

    அருள் ஆனந்தர் கல்லூரி மற்றும் வெற்றி தமிழா இணைந்து போட்டித் தேர்வுகளுக்கான விழிப்புணர்வு முகாம் கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரியில் கல்லூரியில் நடைபெற்றது.

    முகாமை முதல்வர் அன்பரசு தொடங்கி வைத்தார். சிறுபான்மை நலத்துறையைச் சேர்ந்த கருத்தாளர் ஆல்பர்ட் பெர்னாண்டோ சிறப்பு விருந்தினர்களை அறிமுகப்படுத்தினார். மதுரை

    வருவாய் கோட்டாட்சியர் ஷாலினி "கடந்து வந்த பாதை'' என்ற தலைப்பிலும், மேலூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆர்லியஸ் ரெபொனி "எனது அனுபவம்" என்ற தலைப்பிலும், இந்திய தொல்பொருள்கள் ஏற்றுமதி கழகத்தின் செயல் இயக்குநர் ராமசெல்வம் "எளிது எளிது போட்டி தேர்வு எளிது" என்ற தலைப்பிலும், திருவனந்தபுரம் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் பழனிச்சாமி "போட்டித் தேர்வு எதிர்கொள்வது எப்படி" என்ற தலைப்பிலும் மாணவ மாணவிகளுக்கு போட்டித்தேர்வு எழுதுவதை ஊக்குவிக்கும் வகையிலும் பேசினர்.

    முடிவில் கல்லூரி துணை முதல்வர் துரை சிங்கம் நன்றி கூறினார். விழிப்புணர்வு முகாம் ஏற்பாடுகளை பேராசிரியர் சங்கரநாராயணன் மற்றும் சேவியர் செய்திருந்தனர்.

    ×