என் மலர்
நீங்கள் தேடியது "Essential maintenance work is to be carried out."
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது
- பராமரிப்பு பணிகள் நடப்பதையொட்டி நடவடிக்கை
வேலூர்:
சத்துவாச்சாரி, வேலூர், தொரப்பாடி, துணை மின் மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வரும் 20-ந்தேதி மின் நிறுத்தம் செய்யப்படும் என வேலூர் கோட்ட மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
"சத்துவாச்சாரி மற்றும் தொரப்பாடி துணை மின் நிலையத்தில் வரும் 20-ம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல், 2 மணி வரை அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்ப டவுள்ளன.
எனவே, குறிப்பிட்ட நேரத்தில் சத்துவாச்சாரி பேஸ்-1 முதல் 5 வரை, அன்பு நகர், ஸ்ரீராம் நகர், டபுள் ரோடு, வள்ளலார், ரங்காபுரம், அலமேலுமங்காபுரம், சைதாப்பேட்டை, எல்ஐசி காலனி, காகிதபட்டறை, கலெக்டர் அலுவலகம், ஆவின், நீதிமன்ற வளாகம், இ.பி.நகர், ஆர்.டி.ஓ ரோடு, சித்தேரி, தென்றல் நகர், இடையன்சாத்து.
மத்திய சிறை குடியிருப்பு, எழில்நகர், அல்லாபுரம், டோல்கேட், பென்னாத்தூர், காட்டுப்புத்தூர், ஆவரம்பாளையம், தொரப்பாடி, நகர், சங்கரன்பாளையம், சாயி நாதபுரம், பலவன்சாத்து குப்பம், விருபாட்சிபுரம், முருகன் நகர், இடையம்பட்டி, ஓட்டேரி, பாகாயம், சஞ்சீவிபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும்" என தெரிவித்துள்ளார்.






