search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Erode district rain"

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது.

    ஈரோடு:

    ஈரோட்டில் நேற்று மாலை நேரத்தில் சாரல் மழை பெய்தது. இரவில் மழையின் வேகம் அதிகரித்தது. இரவு 10 மணிக்கு மேல் பலத்த மழை கொட்டியது.

    பின்னர் வேகம் குறைந்து மிதமான மழை பெய்தது. நள்ளிரவில் பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்தது. இடியின் சத்தம் நீண்ட நேரம் நீடித்தது.

    இந்த இடி சத்தம் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த பொது மக்கள் தட்டி எழுப்பியது. பல இடங்களில் மின்சாரம் தடைப்பட்டது. இதன் காரணமாக அந்த பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனர். தூக்கத்தையும் தொலைத்தனர்.

    ஈரோட்டில் பெய்தது போல மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளது.பவானி சாகர் பகுதியில் அதிக அளவாக 64 மி. மீட்டர் மழை பதிவானது. ஈரோடு மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-

    வரட்டுப்பள்ளம் 59.2

    கொடிவேரி 30.2

    அம்மாபேட்டை 28.6

    ஈரோடு 25

    கொடுமுடி 2.4

    பவானிசாகர் பகுதியில் அதிக மழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து காணப்பட்டது. இன்று காலை நிலவரப்படி அணைக்கு விநாடிக்கு 5 ஆயிரத்து 572 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

    அணையில் இருந்து ஆற்றுக்கு 1050 கன அடி தண்ணீரும், வாய்க்காலுக்கு 2300 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 99.29 கன அடியாக உள்ளது.

    2-வது நாளாக ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. பெருந்துறையில் அதிகபட்சமாக 20 மி.மீட்டர் மழை பெய்தது. இதனால் தாழ்வாக பகுதியில் மழை நீர் புகுந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக வெயில் வாட்டி வந்தது. மீண்டும் அக்னி நட்சத்திர வெயில் தொடங்கி விட்டதோ என்ற அளவுக்கு வெயில் கொளுத்தியது.

    இதனால் பொது மக்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதி அடைந்து வந்தனர். ஆனால் இரவு நேரங்களில் குளிர் காற்று வீசி வந்தது.

    இந்நிலையில் ஈரோடு மக்களுக்கு சற்று ஆறுதல் தரும் வகையில் நேற்று முன்தினம் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் லேசான மழை பெய்தது. கவுந்தப்பாடியில் அதிகபட்சமான 8 மி.மீ மழை பெய்ந்தது.

    நேற்றும் 2-வது நாளாக ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. பெருந்துறையில் அதிகபட்சமாக 20 மி.மீட்டர் மழை பெய்தது. இதனால் தாழ்வாக பகுதியில் மழை நீர் புகுந்தது.

    இதே போன்று தாளவாடி, சென்னிமலை, அம்மாபேட்டை போன்ற பகுதியிலும் மழை பெய்தது. ஈரோடு மாநகரில் நேற்று காலை வெயில் கொளுத்தியது. ஆனால் மதியம் 3 மணிக்கு மேல் கருமேக மூட்டத்துடன் வானம் காணப்பட்டது.

    பின்னர் சிறிது நேரத்தில் பலத்த மழை பெய்தது. சுமார் 20 நிமிடங்கள் வரை இந்த மழை பெய்ந்தது. இதனால் தாழ்வான பகுதியில் மழை நீர் புகுந்தது.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு.-

    வரட்டுப்பள்ளம்-11.8, அம்மாபேட்டை-6.4, ஈரோடு -6, தாளவாடி -4.

    ×