search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Engineer house"

    துடியலூர் அருகே என்ஜினீயர் வீட்டில் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    கோவை துடியலூர் அருகே உள்ள எஸ்.எம்.பாளையம் வி.கே.ஆர்.அவென்யூ பகுதியை சேர்ந்தவர் டேனியல் ராஜ் (வயது 34). சிவில் என்ஜினீயர். சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டார். பின்னர் இரவு 10 மணியளவில் வீட்டிற்கு வந்தபோது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது அறையில் இருந்த பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த 5 பவுன் செயின், 2 பவுன் மோதிரம், 2 பவுன் பிரெஸ்லெட் உள்பட 11 பவுன் நகை கொள்ளை போய் இருந்தது.

    இதுகுறித்து டேனியல் ராஜ் துடியலூர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்...

    கோவை பி.என்.புதூர் கே.கே.காலனியை சேர்ந்தவர் பிரித்திவிராஜ் (வயது 35). இவரது வீட்டை பராமரிப்பு பணி செய்து வருகிறார். பணியில் கட்டிடத்தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் வேலை முடிந்து ஆட்கள் சென்ற பின்னர் அவர் பீரோவை பார்த்தபோது அதில் இருந்த 5½ பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் திருட்டுபோயிருப்பது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த பிரித்திவிராஜ் இது குறித்து சாய்பாபகாலனி போலீசார் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்கு வேலை செய்த கட்டிடத் தொழிலாளர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


    ×