என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "EMPLOYEES DHARNA"
- நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் தர்ணா நடைபெற்றது.
- தனியார் பராமரிப்புக்கு வழங்குவதை எதிர்த்து
கரூர்:
நெடுஞ்சாலைதுறை சாலைகளை தனியார் பராமரிப்புக்கு வழங்குவதை எதிர்த்து தமிழ்நாடு நெடுஞ்சாலைதுறை சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கத்தினர் கரூரில் தர்ணாவில் ஈடுபட்டனர்.நெடுஞ்சாலைத்துறையில் உள்ள சாலைகளை பேக்கேஜ் உள்ளிட்ட திட்டங்களில் தனியார் பராமரிப்புக்கு வழங்கப்படுவதை கைவிடவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கம் சார்பில் மாவட்டத்தலைவர் கி.ஞானசேகரன் தலைமையில் கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா நடைபெற்றது.தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ரா.தாமோதரன் தொடக்க உரையாற்றினார். பராமரிப்பு ஊழியர்கள் சங்க மாநில துணைத்தலைவர் குப்புச்சாமி சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயலாளர் எஸ்.சந்திசேகரன் கோரிக்கை விளக்க உரையாற்றினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில து ணைத்தலைவர்ம காவிஷ்ணன் நிறைவுரையாற்றினார். மாவட்ட துணைத்தலைவர் சிங்கராயர் வரவேற்றார். மாவட்டப்பொருளாளர் எஸ்.வெங்கடேஸ்வரன் நன்றி கூறினார்.தர்ணாவில், நெடுஞ்சாலைதுறையில் உள்ள சாலைகளை பேக்கேஜ் உள்ளிட்ட திட்டங்களில் தனியார் பராமரிப்புக்கு வழங்கப்படுவதை கைவிட வேண்டும். 41 மாத பணி நீக்க காலத்தை பணி ஓய்விற்க்கு பின்பு, பணிக்கொடைக்கும், ஓய்வூதிய பலன்களுக்கும் பொருந்தக்கூடிய வகையில் அரசாணை வெளியிட வேண்டும். பணி நீக்க காலத்தில் இறந்த சாலை பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் விதிமுறைகளை தளர்த்தி பணி நியமனம் வழங்க வேண்டும். சாலைகளை பராமரிக்க 5 கி.மீட்டருக்கு 2 சாலை பணியாளர்கள் என பணியிட ஒப்புதல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்