search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "EMPLOYEES DHARNA"

    • நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் தர்ணா நடைபெற்றது.
    • தனியார் பராமரிப்புக்கு வழங்குவதை எதிர்த்து

    கரூர்:

    நெடுஞ்சாலைதுறை சாலைகளை தனியார் பராமரிப்புக்கு வழங்குவதை எதிர்த்து தமிழ்நாடு நெடுஞ்சாலைதுறை சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கத்தினர் கரூரில் தர்ணாவில் ஈடுபட்டனர்.நெடுஞ்சாலைத்துறையில் உள்ள சாலைகளை பேக்கேஜ் உள்ளிட்ட திட்டங்களில் தனியார் பராமரிப்புக்கு வழங்கப்படுவதை கைவிடவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கம் சார்பில் மாவட்டத்தலைவர் கி.ஞானசேகரன் தலைமையில் கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா நடைபெற்றது.தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ரா.தாமோதரன் தொடக்க உரையாற்றினார். பராமரிப்பு ஊழியர்கள் சங்க மாநில துணைத்தலைவர் குப்புச்சாமி சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயலாளர் எஸ்.சந்திசேகரன் கோரிக்கை விளக்க உரையாற்றினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில து ணைத்தலைவர்ம காவிஷ்ணன் நிறைவுரையாற்றினார். மாவட்ட துணைத்தலைவர் சிங்கராயர் வரவேற்றார். மாவட்டப்பொருளாளர் எஸ்.வெங்கடேஸ்வரன் நன்றி கூறினார்.தர்ணாவில், நெடுஞ்சாலைதுறையில் உள்ள சாலைகளை பேக்கேஜ் உள்ளிட்ட திட்டங்களில் தனியார் பராமரிப்புக்கு வழங்கப்படுவதை கைவிட வேண்டும். 41 மாத பணி நீக்க காலத்தை பணி ஓய்விற்க்கு பின்பு, பணிக்கொடைக்கும், ஓய்வூதிய பலன்களுக்கும் பொருந்தக்கூடிய வகையில் அரசாணை வெளியிட வேண்டும். பணி நீக்க காலத்தில் இறந்த சாலை பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் விதிமுறைகளை தளர்த்தி பணி நியமனம் வழங்க வேண்டும். சாலைகளை பராமரிக்க 5 கி.மீட்டருக்கு 2 சாலை பணியாளர்கள் என பணியிட ஒப்புதல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.


    ×