search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Elkai Pandiyam"

    • அறந்தாங்கி அருகே மத நல்லிணக்க மாட்டுவண்டி எல்கை பந்தையம் நடைபெற்றது
    • 21 குதிரைகளும் போட்டியில் கலந்து கொண்டு சீரிப்பாய்ந்தன.

    அறந்தாங்கி,

    புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா ஏனாதி கிராமத்தில் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் மற்றும் சேக் இஸ்மாயில் ஒலியுல்லா தர்கா இணைந்து நடத்தும் மத நல்லிணக்க திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி, குதிரை வண்டி எல்கை பந்தையம் நடைபெற்றது. பந்தையத்தில் புதுக்கோட்டை, தஞ்சை, திருச்சி, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து மாடுகள் மற்றும் குதிரைகள் பங்கேற்றன. 5 பிரிவுகளாக நடைபெற்ற பந்தையத்தில் பெரியமாடு, நடுமாடு, கரிச்சான்மாடு, நடுக்குதிரை, கரிச்சான் குதிரை என 32 ஜோடி மாடுகளும், 21 குதிரைகளும் போட்டியில் கலந்து கொண்டு சீரிப்பாய்ந்தன.

    பந்தையத்தில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாடு மற்றும் குதிரைகளுக்கு ரூ.2 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலான கோப்பைகள் மற்றும் ரொக்கப்பணம் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் மாடு மற்றும் குதிரைகளை சிறப்பாக ஓட்டி வந்த சாரதிகளுக்கு கொடிப்பரிசு மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. பந்தையத்தை ரசிகர்கள் சாலையின் இருபுறத்திலும் திரண்டிருந்து கண்டு ரசித்தனர். இதில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஏனாதி கிராமத்தார்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.

    ×