என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Drowning in the sea"
- தேவிபட்டினம் கடலில் மூழ்கி பலியான 3 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்.
- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மதுரை
மதுரை தெற்கு தொகுதியைச் சேர்ந்த நாகராஜ் மனைவி இருளாயி (வயது 55), இருளாண்டி மனைவி மணிமேகலை (50), முருகன் (33) ஆகியோர் கோவில் வழிபாட்டுக்காக ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினம் சென்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக படகு மூழ்கியது. இதில் 3 பேரும் கடலில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.
இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் கோவில் வழிபாட்டுக்கு சென்ற 2 பெண்கள் உள்பட 3 பேர் கடலில் மூழ்கி இறந்த சம்பவம் வேதனை தருகிறது. அவர்களது குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். கடலில் மூழ்கி உயிரிழந்த இருளாயி, மணிமேகலை, முத்துமணி ஆகியோரது குடும்பங்களுக்கு முதல்- அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்