search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "drinking problem"

    வத்தலக்குண்டு அருகே குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி தர்ணா போராட்டம் நடைபெற்றது.

    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு அருகே உள்ள பழைய வத்தலக்குண்டு மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்காததால் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் பழைய வத்தலக்குண்டு ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கிளைச் செயலாளர் ஜீவானந்தம் தலைமை தாங்கினார். கிளைச் செயலாளர்கள் இருளையா, ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த போராட்டத்தில் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தையும், மாவட்ட நிர்வாகத்தையும் கண்டித்து அனைத்து பகுதி மக்களுக்கும் 3 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என அவர்கள் கோ‌ஷமிட்டனர்.

    மோட்டார் இன்றி இயங்காமல் உள்ள ஆழ்குழாய் கிணறுகளில் மோட்டார் பொருத்தி இயக்க வேண்டும். பழுதடைந்த சிறு மின் விசை பம்புகளை சரி செய்ய வேண்டும்.

    சேதமடைந்த சாக்கடை கால்வாய்களை சீரமைக்க வேண்டும். இப்பகுதியில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும். துணை சுகாதார நிலையத்தை ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்த வேண்டும் என அவர்கள் கோ‌ஷமிட்டனர்.

    இந்த போராட்டத்தில் மாவட்ட குழு செயலாளர் சச்சிதானந்தம், மாவட்ட செயற்குழு குணசேகரன், ஒன்றிய குழு செயலாளர் கலைச் செல்வன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் தெய்வேந்திரன், தண்டபாணி, பாண்டியம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×