search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Draft preparation"

    • நாடு முழுவதும் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
    • பி.எல்.ஐ., -2.0 திட்டத்தில் குறைந்தபட்ச முதலீடு 10 கோடி ரூபாயாக நிர்ணயிக்க வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் பின்னலாடை தொழில்துறையினருடன், மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சர் அமைச்சர் தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ் கலந்தாய்வு நடத்தினார்.அப்போது அவர் பேசுகையில், மத்திய அரசு 75வது சுதந்திர தின அமுதபெருவிழாவையொட்டி நாடு முழுவதும் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக அடுத்த 25 ஆண்டுகளுக்கான வளர்ச்சியில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம்.பி.எல்.ஐ., -2.0 திட்டம் தொடர்பாக திருப்பூர் பின்னலாடை தொழில்துறையினர் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர். அவற்றை பரிசீலித்து புதிய விதிமுறைகளுடன், பி.எல்.ஐ., -2.0 திட்ட வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது.

    புதிய விதிமுறைகளுடன் கூடிய பி.எல்.ஐ., -2.0 திட்டம் விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.

    இது குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்ரமணியன் கூறுகையில், பி.எல்.ஐ., -1 திட்டத்தில் பயன்பெற நிறுவனங்கள் 100 கோடி ரூபாய்க்கு அதிகமாக முதலீடு செய்திருக்க வேண்டும் என்பதால் குறு, சிறு, நடுத்தர தொழில்கள் பயன்பெற இயலவில்லை. பி.எல்.ஐ., -2.0 திட்டத்தில் குறைந்தபட்ச முதலீடு 10 கோடி ரூபாயாக நிர்ணயிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். கோரிக்கையை கேட்டறிந்த மத்திய அமைச்சர் திருத்தப்பட்ட திட்ட வரைவு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். அறிவிப்பை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கிறோம் என்றார்.

    ×