என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DMK On behalf of the garland to the statue of Anna"

    • ஊர்வலமாக வந்து அஞ்சலி செலுத்தினர்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    குடியாத்தம்:

    குடியாத்தம் நகர, ஒன்றிய திமுக சார்பில் முன்னாள் முதல்வர் பேரறிஞர்அண்ணா நினைவு நாளை முன்னிட்டு கட்சி நிர்வாகிகள் ஊர்வலமாக வந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

    குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலுவிஜயன், நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன், ஒன்றியகுழு தலைவர் என்.இ.சத்யானந்தம், ஒன்றிய செயலாளர்கள் கள்ளூர்ரவி, நத்தம்பிரதீஷ், ஏ.அன்பரசு ஆகியோர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

    நிகழ்ச்சியில் திமுக மாநில கொள்கைபரப்பு துணைசெயலாளர் குடியாத்தம் குமரன், மாவட்டதுணை செயலாளர் வக்கீல் பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் கண்ணன்.

    குடியாத்தம் நகர திமுக சார்பில் நிர்வாகிகள் நெடுஞ்செழியன், மனோஜ், ஜம்புலிங்கம், வசந்தா, முன்னா, பாரி, கோடீஸ்வரன், தண்டபாணி குடியாத்தம் மேற்கு ஒன்றியத்தின் சார்பில் நிர்வாகிகள் முரளிதரன், சிட்டிபத்மநாபன், கல்பனா, லிங்கம், பாபு, சதாசிவம், சந்திரன்.

    குடியாத்தம் வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் சேகர், சரவணன், கிருஷ்ணமூர்த்தி, சாவித்திரிமணி, பத்ரிநாத், அண்ணாதுரை, ரமேஷ், ஆனந்தன்.

    குடியாத்தம் கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள் பழனி, மோகன், நத்தம்அமர், ரமேஷ் குடியாத்தம் தெற்கு ஒன்றியம் நிர்வாகிகள் தரணிசுந்தர், மகேந்திரன், தமிழ்ச்செல்வி, நவீன் விஜயகுமார் உள்பட கட்சியின் பல்வேறு அணி நிர்வாகிகள், ஒன்றியகுழு உறுப்பினர்கள், நகரமன்ற உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×