என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "District First Conference of the Auxiliary Development Association"

    • பணிக்கொடை தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்
    • 15 கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தல்

    குடியாத்தம்:

    குடியாத்தம், பிச்சனூர் திருமுருக கிருபானந்த வாரியார் திருமண மண் டபத்தில் தமிழ்நாடு அங்கன்வாடி பணியா. ளர்கள் மற்றும் உதவியாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட முதல் மாநாடு நடந்தது.

    மாநாட்டிற்கு வேலூர் மாவட்டத் தலைவர் செல்வநாயகி தலைமை வகித்தார்.மாவட்ட பொருளாளர் மகாலட்சுமி வரவேற்றார். கவுரவத் தலைவர் ஜெம்மா டிசில்வா, தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை செயலாளர் சுப்பிரமணியன், அமைப்பு செயலாளர் வேலுசுவாமி ஆகியோர் பேசினர்.

    இதில் மாநில தலைவர் பத்மம்மா, துணைத் தலை வர் மரியம்மா, மாநில பிரச்சார செயலாளர் விஜயா, மாநில பொருளா ளர் கோமளாதேவி, மாவட்ட அமைப்பு செய லாளர் உமா, சின்னசேலம் மாவட்ட தலைவர் காந்தி மதி, செயலாளர் அம்பிகா, வேலூர் மாவட்ட பொருளாளர் லோகநாயகி உட் பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் வரையறுக்கப்பட்ட வேலைநேரம் காலை 8.30 மணி முதல் 4 மணி வரை என்றுள்ளது.

    இருப்பினும் கலெக்டரால் அவ்வப்போது சுட்டிக்காட்டப்படுகின்ற பிற துறைகளைச் சேர்ந்த பணிகளை செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள்.

    இவ்வளவு உழைப்பை கொடுக்கும் பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களது பணி இதுவரை நிரந்தரப் படுத் தப்படவில்லை. அனைவரும் பகுதிநேர அரசுப் பணியாளர்களாக இருப்பது வேதனைக்குரியதாகும். எனவே அங்கன்வாடி ஊழியர்களை நிரந்தரப்பணியாளர்களாக அறிவித்து 2 காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

    அங்கன்வாடி பணியா ளர்கள் மற்றும் உதவியா ளர்கள் பணியில்இருந்து ஓய்வு பெறும்போது வழங்கப்படும் பணிக்கொடை தொகையை உயர்த்தி பணியாளர்களுக்கு ரூ.10 லட் சமும், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சமும் வழங்க வேண்டும் என்பது உட்பட 15 கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    மாநில பொதுச்செயலாளர் நளினி நன்றி கூறினார்.

    ×