search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "district collector prabhakar"

    தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஒருநாள் சுற்றுப்பயணமாக இன்று காலை ஈரோடு வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் பிரபாகர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். #TNGovernor #BanwarilalPurohit

    ஈரோடு:

    தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஒருநாள் சுற்றுப்பயணமாக இன்று ஈரோடு வந்தார்.

    ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் சென்னையில் இருந்து இன்று காலை 5.30 மணிக்கு ஈரோடு ரெயில் நிலையத்துக்கு வந்த அவரை ஈரோடு மாவட்ட கலெக்டர் பிரபாகர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன், ஏ.டி.எஸ்.பி. பாலாஜி சரவணன், டவுண் டி.எஸ்.பி. ராதாகிருஷ்ணன் ஆகியோரும் வரவேற்றனர்.

    மேலும் அதே ரெயிலில் வந்த மின்வாரியத்துறை அமைச்சர் தங்கமணியும் கவர்னர் பன்வாரிலாலை வரவேற்றார்.

    வரவேற்பை பெற்றுக்கொண்ட கவர்னர் பிறகு நேராக காலிங்கராயன் அரசினர் விருந்தினர் மாளிகைக்கு சென்று ஓய்வெடுத்தார்.

    அங்கு போலீசாரின் அணிவகுப்பு மரியாதை நடந்தது. அதனை கவர்னர் ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து காலை 9 மணி அளவில் கவர்னர் பன்வாரிலால் கோபிக்கு காரில் புறப்பட்டு சென்றார்.

    கவர்னர் வருகையையொட்டி கோபிக்கு செல்லும் இரு வழியிலும் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    கோபி வாய்க்கால் ரோட்டில் உள்ள டி.எஸ். ராமன் விடுதியில் உள்ள தியாகி லட்சுமணன் சிலை திறப்பு விழா நடக்கிறது. விழாவில் தியாகி லட்சுமணன் சிலையை கவர்னர் பன்வாரிலால் திறந்து வைத்து சிறப்புரை ஆற்றுகிறார்.

    விழாவில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், கலெக்டர் பிரபாகர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.

    விழா முடிந்ததும் மதியம் மீண்டும் காலிங்கராயன் விருந்தினர் மாளிகைக்கு வருகிறார்.

    அங்கு பொதுமக்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்களிடம் மனுக்களை வாங்கி குறைகளை கேட்கிறார்.

    மாலை 4.30 மணிக்கு ஈரோடு பஸ் நிலையத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சுகாதார பணியை மேற்கொள்கிறார். #TNGovernor #BanwarilalPurohit
    ×