search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DISPOSAL WORKERS"

    • திருச்சியில் தனியார் நிறுவனம் சார்பில் கழிவு நீர் அகற்றும் பணியாளர்களுக்கு முதலுதவி பெட்டி வழங்கப்பட்டது
    • இந்த நிகழ்வில் திருச்சி செயின்ட் ஜான்ஸ் ஆம்புலன்ஸ் பயிற்றுனர் ராதாகிருஷ்ணன் பயிற்சி வழங்கினார்

    திருச்சி:

    உலக முதலுதவி தினத்தை முன்னிட்டு கழிவுநீர் அகற்றும் வாகன பணியாளர்களுக்கு முதலுதவி பயிற்சி மற்றும் உபகரணங்கள் அடங்கிய முதலுதவி பெட்டி வழங்கும் நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது.

    இந்தியன் இன்ஸ்டிடியூட் பார் ஹியூமன் செட்டில்மெண்ட்ஸ் நிறுவனத்தின் மூலம் திருச்சியில் செயல்பட்டு வரும் நகர் முழுவதும் உள்ளடங்கிய சுகாதாரம் என்கிற திட்டத்தின் மூலம் கழிவுநீர் தொட்டிகளில் உள்ள கழிவுகளை அகற்றும் வாகன பணியாளர்கள் மற்றும் நுண்ணுருவம் செயலாக்கம் மையப் பணியாளர்களுக்கு முதலுதவி பயிற்சி மற்றும் முதலுதவி பெட்டி வழங்கப்பட்டது

    இந்த நிகழ்வில் திருச்சி செயின்ட் ஜான்ஸ் ஆம்புலன்ஸ் பயிற்றுனர் ராதாகிருஷ்ணன் பயிற்சி வழங்கினார்.

    மேலும் தூய்மை பணியில் ஈடுபடும்போது ஏற்படக்கூடிய அபாயங்கள் மற்றும் ஆபத்துகளில் இருந்து அவர்களது உயிர்களை காக்க உதவும் முதலுதவி பொருட்கள் அடங்கிய முதல் உதவி பெட்டிகளும் வழங்கப்பட்டது.

    இதில் திருச்சி மாவட்ட கலெக்டர் மா.பிரதீப் குமார், திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், நகர் நல அலுவலர் ஷர்மிலி, கலாமணி மற்றும் தனியார் நிறுவனத்தின் தலைமை வல்லுனர் சுகந்தா பிரிசில்லா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×