என் மலர்
நீங்கள் தேடியது "Dindigul Mariyamman Temple"
- கோட்டை மாரியம்மன் கோவில் மாசிப்பெருந்திருவிழா இன்று பூத்தமலர் பூ அலங்காரத்துடன் தொடங்கியது.
- மாசிப்பெருந்திருவிழா தொடங்கியதை முன்னிட்டு திண்டுக்கல் நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.
திண்டுக்கல்:
திண்டுக்கல்மக்களின் காவல் தெய்வமாகவும், கேட்டவருக்கு கேட்டவரம் அளிக்கும் அன்னையாகவும் விளங்கும் கோட்டை மாரியம்மன் கோவில் மாசிப்பெருந்திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகுசிறப்பாக நடைபெறும்.
இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று பூத்தமலர் பூ அலங்காரத்துடன் ெதாடங்கியது. இதனைமுன்னிட்டு கோவிலில் அம்மனுக்கு பாலாபிஷேகம் நடத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. கோவில் வளாகத்தில் பல வண்ண மலர்களாலும், பொடிகளாலும் கோலம் வரையப்பட்டடது. இதனை பக்தர்கள் ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.
நாளை காலை பூத்தேர் ஊர்வலம் கோவில் முன்பிருந்து தொடங்கி மேற்குரதவீதி, கலைக்கோட்டு விநாயகர் ேகாவில், பென்சனர் தெரு, கோபாலசமுத்திரம் தெரு, கிழக்குரதவீதி, தெற்குரதவீதி வழியாக உலா வரும். அலங்கரிக்கப்பட்ட பூத்தேரில் அம்மன் எழுந்தருளி வீதிஉலா வருவார். இதற்காக பூத்தேர் வரும் வழி எங்கிலும் பாதை சுத்தப்படுத்தப்பட்டு பூ மண்டகப்படி அமைக்கப்பட்டுள்ளது.
வழி நெடுகிலும் பக்தர்கள் வழங்கும் பூக்களை அம்மனுக்கு காணிக்கையாக செலுத்தி வழிபடுவார்கள். வருகிற 19-ந்தேதி இரவு 8 மணிக்கு சாட்டுதல் நிகழ்ச்சியும், 21-ந்தேதி கொடியேற்றம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. அப்போது கோவிலில் ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் தொடங்குவார்கள்.
இதனைெதாடர்ந்து அம்மன் வெவ்ேவறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். மாசித்திருவிழாவை முன்னிட்டு கோவில் வளாகத்தில் ராட்டினம், மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த ஸ்டால்கள் அமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. விழா நடைபெறும் அனைத்து நாட்களும் கோவில் கலையரங்கில் இன்னிசை கச்சேரி, பக்திசொற்பொழிவு உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.
வருகிற 3-ந்தேதி பூக்குழி இறங்கும் திருவிழாவும், 4-ந்தேதி தசாவதாரம், 5-ந்தேதி மஞ்சள் நீராட்டுதல் நடைபெற்று மறுநாள் காலை கொடியிறக்கம் நடைபெறும். மாசிப்பெருந்திருவிழா தொடங்கியதை முன்னிட்டு திண்டுக்கல் நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.






