என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dimithi festival in the temple"

    • நேர்த்தி கடன் செலுத்தினர்
    • ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை, மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த இந்திரவனம், வனப்பகுதியில் உள்ள மன்னர் சுவாமி பச்சையம்மன், கோவிலில் ஆடி மாத தீமிதி திருவிழா, கடந்த 12ஆம் தேதி பச்சையம்மனுக்கு, காப்பு கட்டி தொடங்கியது.

    தொடர்ந்து 13-ஆம் தேதி பெருமாள் உற்சவம், 14ஆம் தேதி, மாரியம்மனுக்கு, கூழ் வார்த்தல் நிகழ்ச்சி, 15 ஆம் தேதி 108 பால்குட ஊர்வலம் நடந்தது.முக்கிய திருவிழாவான நேற்று பச்சையம்மனுக்கு, பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, பல்வேறு வண்ண மலர்கள் அலங்காரம் செய்து வைத்தனர்.

    பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள வாமுனி, செம்முனி, ஜடாமுனி, வேதமுனி, கரி முனி, உள்ளிட்ட ஏழு முணிகளுக்கு மாலை அணிவித்து பம்பை, உடுக்கை, அடித்து குறி கேட்டு நேர்த்தி கடனாக ஆடு, கோழி, ஆகியவை பலி கொடுத்தனர்.

    பின்னர் கோவில் வளாகத்தில் தீ குண்டம் அமைத்தனர்.

    இதில் விரதம் இருந்த பக்தர்கள் அருகில் உள்ள குளத்தில் நீராடி காப்பு கட்டி குண்டத்தில் இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினர்.

    இதில் ஆரணி, ஆற்காடு, வேலூர், குடியாத்தம், காஞ்சிபுரம், சென்னை, ஆரணி, செஞ்சி, விழுப்புரம், போளூர், வந்தவாசி, உள்ளிட்ட சுற்றுப்புற நகரங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை நாட்டாண்மை தாரர்கள், ஊர் பெரியவர்கள், விழா குழுவினர், இளைஞர்கள், ஆகியோர் செய்திருந்தனர். இரவு தெய்வீக நாடகம் நடந்தது.

    ×