search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "D.I.G. Research"

    • அனைத்து பதிவேடுகளையும் பார்வையிட்டார்
    • போலீசார் உடனிருந்தனர்.

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி ஆய்வு மேற்கொண்டார்.

    ஆய்வின் போது அலுவலகத்தில் பின்பற்றப்படும் அனைத்து பதிவேடுகளையும் பார்வையிட்டார்.

    மேலும் புகார் மனுக்கள் மீதான விசாரணை மற்றும் நிலுவையிலுள்ள மனுக்கள் பற்றி கேட்டறிந்தார்.

    பின்னர் வழக்கு சம்பந்தமான கோப்புகளை பார்வையிட்டு துரித நடவடிக்கை எடுக்கவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.

    பொது மக்களிடையே நற்பெயர் பெறும் வகையில் அன்பாகவும், மரியாதையுடனும் பழகி பணிசெய்ய வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்.

    இந்த ஆய்வின் போது ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு, இன்ஸ்பெக்டர்கள் பார்த்தசாரதி, மங்கையர்கரசி, ஷாகின் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

    ×