என் மலர்
நீங்கள் தேடியது "Died miserably"
- மனைவி திட்டியதால் மனமுடைந்தார்.
- போலீசார் விசாரணை
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே உள்ள எஸ் தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் சமையல் மாஸடர் சாமிநாதன் ( வயது 65).
இவருக்கு குடிப்பழக்கம் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார்.
அப்போது அவரது மனைவி பூங்கொடி திட்டியதால், மனமுடைந்து அவ்வூரில் உள்ள ஏரிக்கரை பகுதியில் சென்று விஷத்தழை குடித்து விட்டார்.
ஆபத்தான நிலையில் இருந்த சாமிநாதனை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக கண்ணமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






