search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Died by drowning in the river"

    • யூ-டியூப் சேனலுக்காக படம் எடுக்க வந்த ேபாது பரிதாபம்
    • அறிவிப்பு பலகை வைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த படவேடு வழியாககமண்டல நதி ஓடுகிறது. நேற்று முன்தி னம் சென்னை கீழ்கட்டளை உள்பட பல்வேறு பகுதியில் வசிக்கும் வாலிபர்கள் 8 பேர் குழுவாக படவேடு பகுதியில் உள்ள ராமர் கோவிலை யூடி யூப் சேனலுக்காக வீடியோ எடுக்க வந்து தங்கியிருந்தனர்.

    பின்னர் நேற்று மதியம் பிரகலாதன் என்பவர், தான் சாப்பிட்ட தட்டை கழுவுவ தற்காக கமண்டல நதிக்கு சென்றார். அவருடன் நங்க நல்லூரை சேர்ந்த ஸ்ரீவர்ஷ னும் சென்றார். அப்போது பிரகலாதன் கால் தவறி தண் ணீரில் விழுந்து விட்டார். இதனை பார்த்த ஸ்ரீவர்ஷன் அவரை காப்பாற்ற முயன்ற போது அவரும் தண்ணீரில் மூழ்கினார்.

    இதுகுறித்து போளூர் தீயணைப்பு துறை யினருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. அதன்பேரில் தீய ணைப்புத் துறையினர் விரைந்து வந்து தேடியபோது 2 பேரும் தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டனர். பின்னர் இருவரது உடல்களையும் தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.

    கண்ணமங்கலம் போலீசார் 2 பேரின் உடல்களையும் பிரேத பரி சோதனைக்காக அடுக்கம் பாறை அரசு மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக சந்தவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் நடந்த இடத்தில் பாறைகள் உள்ளன. இதனால் இங்கு வழுக்கி விழுந்து ஏற்கனவே பலர் இறந்துள்ள னர். எனவே அந்த இடத்தில் எச்சரிக்கை செய்யும் வகை யில் அறிவிப்பு பலகை மற்றும் கம்பிவேலி அமைத்து யாரும் செல்லாதவாறு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண் டும் என பல்வேறு தரப்பினரும் தெரிவித்துள்ளனர்.

    ×