என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Died by drowning in barrage"
- சென்னையை சேர்ந்தவர்
- போலீசார் விசாரணை
நெமிலி:
சென்னை தண்டையார் பேட்டை பவர் ஹவுஸ் பகுதியை சேர்ந்தவர் அஜித் என்கிற மணிகண்டன் (வயது 24). எலக்ட் ீசியன். இவர் ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த கீழ்வெங்கடாபுரத்தில் உள்ள நண்பர் வீட்டுக்கு வந்துள்ளார்.
அப்போது சம்பத்ராயன் பேட்டையில் உள்ள தடுப்பணையில் நண்பர்களுடன் குளிக்க சென்றார். நீச்சல் தெரியாத அஜித் ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்கியுள்ளார். அவரை நண்பர்கள் மீட்க முயன்றும் முடியவில்லை.
உடனடியாக இதுகுறித்து அரக்கோணம் தீயணைப்புதுறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து 2 மணி நேர தேடுதலுக்கு பின்னர் அஜித்தை பிணமாக மீட்டனர்.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத் துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து நெமிலி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நண்பர்கள் வீட்டிற்கு வந்தவர் தண்ணீரில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்