என் மலர்
நீங்கள் தேடியது "Devotes take milk jug and torch and take brass"
- ஜெனகை மாரியம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி எடுத்து ஊர்வலமாக வந்தனர்.
- ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சோழவந்தான்
மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் கடந்த 22-ந் தேதி வைகாசி பெருந் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் அம்மன் புறப்பாடு நடை பெற்றது.
இதில் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான பால்குடம், அக்னிச்சட்டி எடுக்கும் திருவிழா ேநற்று நடந்தது.இதில் பக்தர்கள் வைகையாற்றுக்கு சென்று பூஜை செய்து பால்குடம் மற்றும் அக்னி சட்டி எடுத்து ஊர்வலமாக வந்தனர். அவர்கள் கோவில் முன்புள்ள கொடி கம்பத்தைச் சுற்றி 4 ரத வீதிகளை வலம் வந்தனர்.
நேர்த்திக்கடனுக்காக உருவ பொம்மை, ஆயிரங்கண்பானை, 21அக்னிச்சட்டி, கரும்புதொட்டிலில் குழந்தை எடுத்துவருதல், கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி வருதல், அலகு குத்தி வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.






