search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "denuclearization"

    வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னுடன் கூடிய விரைவில் இரண்டாம் கட்ட சந்திப்பு நடைபெறும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். #DonaldTrump #KimJongUn
    வாஷிங்டன் :

    உலக நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி வடகொரியா பலமுறை அணு குண்டுகளையும், கண்டம்விட்டு கண்டம் பாயும் பல ஏவுகணைகளையும் பரிசோதித்ததால் அமெரிக்காவின் கோபத்திற்கு ஆளாகி பொருளாதார தடைகளை சந்தித்தது.

    இதைத்தொடர்ந்து, தென்கொரியா எடுத்த முயற்சியின் பலனாகத்தான் வட, தென் துருவங்கள் போன்று விளங்கி வந்த அமெரிக்க அதிபர் டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் ஜூன் மாதம் சிங்கப்பூரில் சந்தித்துப் பேசினர்.

    அந்த வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பின் போது, கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற பிரதேசமாக மாற்ற கிம் ஜாங் அன் உறுதி அளித்து, டிரம்புடன் ஒப்பந்தம் செய்து கொண்டார். அதன் பின்னர் அணு ஆயுதங்களை கைவிடுவது தொடர்பான வடகொரியாவின் நடவடிக்கையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்ற போதிலும், அந்த நாடு அணுகுண்டுகளையோ, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையோ சோதித்து பார்க்கவில்லை.

    எனினும், அணு ஆயுத ஒழிப்பில் வடகொரியா மெத்தனம் காட்டுவதாக குற்றம்சாட்டிய அமெரிக்கா, அணு ஆயுதத்தை முற்றிலும் ஒழித்த பிறகே வடகொரியா மீதான பொருளாதார தடைகள் விலக்கப்படும் என தெரிவித்தது. ஆனால், நிதானத்தை கடைப்பிடித்த கிம் ஜாங் அன், இம்மாத தொடக்கத்தில் நடைபெற்ற அந்நாட்டின் 70-வது ஆண்டு விழாவில் கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் ஏவுகனைகள் மற்றும் அணு ஆயுதங்கள் இல்லாமல் ராணுவ அணிவகுப்பை நடத்தி முடித்தார்.

    மேலும், சமீபத்தில் மூன்று நாள் பயணமாக வட கொரியா சென்ற தென் கொரிய அதிபர் மூன் ஜே இன்னுக்கு சிறப்பான வரவேற்பு அளித்த கிம் ஜாங் அன் அவருடன் மிகவும் நட்புடன் பழகினார். இந்த பயணத்தின் போது டொனால்டு டிரம்ப்புக்கு, கிம் ஜாங் அன் எழுதிய ரகசிய கடிதம் மூன் ஜே இன் வாயிலாக வெள்ளை மாளிகைக்கு கொண்டு சேர்க்கப்பட்டது.



    அணு ஆயுதங்களை அழிக்கும் நடவடிகைகளில் தொடர்ந்து கவணம் செலுத்தி வருவதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ள கிம் ஜான் அன், டிரம்ப்பை மீண்டும் சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளார் என அக்கடிதம் குறித்து வெள்ளை மாளிகை செய்தி வெளியிட்டது.

    இந்நிலையில், கிம் ஜான் அன்னுடன் விரைவில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அதிபர் டொனாடு டிரம்ப் கூறியுள்ளார். நியூயார்க்கில் நடைபெற்று வரும் 73-வது ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தின் போது தென் கொரிய அதிபர் மூன் ஜே இன்னை சந்தித்து பேசிய பின் அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளதாவது :-

    இது மிகவும் வித்தியாசமான உலகம், முன்னர் மிகவும் அபாயகரமான சூழல் நிலவியது. ஆனால் ஓர் ஆண்டுக்கு பிறகு காலம் மாறிவிட்டது. அணு ஆயுத அழிப்பில் கிம் காட்டும் அக்கறையால் நான் உற்சாகம் அடைந்துள்ளேன். எங்களுக்கு (டிரம்ப் மற்றும் கிம்) எந்த அவசரமும் இல்லை. யாரும் இதுவரை செயல்படுத்தாததை நாங்கள் செயல்படுத்தி அதில் முன்னேற்றம் கண்டுள்ளோம்.

    எங்களுக்கு இடையிலான உறவு அசாதாரணமான வகையில் மிகவும் சிறப்பாக உள்ளது. எங்கள் இருவருக்கும் இடையே கூடிய விரைவில் இரண்டாம் கட்ட சந்திப்பு நடைபெறும்’ என அவர் தெரிவித்துள்ளார். #DonaldTrump #KimJongUn
    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் கடிதம் எழுதியுள்ளார், அதில் இருவரும் மீண்டும் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட அவர் கோரிக்கை வைத்துள்ளார். #DonaldTrump #KimJongUn
    வாஷிங்டன் :

    உலக நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி வடகொரியா பலமுறை அணு குண்டுகளையும், கண்டம்விட்டு கண்டம் பாயும் பல ஏவுகணைகளையும் பரிசோதித்ததால் அமெரிக்காவின் கோபத்திற்கு ஆளாகி பொருளாதார தடைகளை சந்தித்தது.

    தொடர்ந்து அமெரிக்க அதிபர் டிரம்பும் வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் வார்த்தை போரில் ஈடுபட்டனர். இதனால் இரண்டு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து, தென்கொரியாவின் முயற்சியினால் அமெரிக்கா மற்றும் வடகொரியா தலைவர்களின் அமைதி பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு சிங்கப்பூரில் கடந்த ஜூன் மாதம் வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பு நடைபெற்றது. அதில், அணு ஆயுதங்களை முற்றிலுமாக அழித்து விடுவதாக அறிவித்த கிம் ஜாங் அன் பிறகு அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

    எனினும், அணு ஆயுத ஒழிப்பில் வடகொரியா மெத்தனம் காட்டுவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியது. இதற்கிடையே கடந்த 5-ம் தேதி வடகொரியா ஜனாதிபதியை தென் கொரியாவை சேர்ந்த உயர் நிலைக்குழு சந்தித்து பேசியது.

    அப்போது, அமெரிக்கா ஜனாதிபதி மீது தான் நம்பிக்கை வைத்துள்ளதாகவும், அவரது ஆட்சிக் காலத்துக்குள் அணு ஆயுத ஒழிப்பு முழுமை பெறும் எனவும் கிம் ஜாங் உன் கூறியதாக தெரிகிறது.

    மேலும், நேற்று நடைபெற்ற வடகொரியாவின் 70-வது ஆண்டு விழாவில் கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் ஏவுகனைகள் மற்றும் அணு ஆயுதங்கள் இல்லாமல் ராணுவ அணிவகுப்பை கிம் ஜாங் அன் நடத்தி முடித்தார்.

    அவரது இந்த நடவடிக்கையை பாராட்டி டிரம்ப் நன்றி தெரிவித்தார். மேலும், நாம் இருவருக்கும் இடையே மோதல் நடக்கும் என நினைப்பவர்களின் எண்ணங்கள் தவறானது என நாம் இருவரும் சேர்ந்து நிரூபிப்போம் எனவும் தெரிவித்திருந்தார். இதனால் இருவருக்கும் இடையேயான உறவில் நேர்மறையான முன்னேற்றம் ஏற்பட்டது.

    இந்நிலையில், டிரம்பிற்கு கிம் ஜாங் அன் கடிதம் எழுதியுள்ள தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் குறிப்பிட்டுள்ளதாவது :-

    கிம் ஜாங் அன் அதிபர் டிரம்பிற்கு கடிதம் எழுதியுள்ளார். மிகவும் நல்ல விஷயங்களை உள்ளடக்கிய நேர்மறையான கடிதமாக அமைந்துள்ளது. கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களை அழிக்கும் நடவடிகைகளில் தொடர்ந்து கவணம் செலுத்தி வருவதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    அந்த கடிதத்தின் பிரதான நோக்கம் அதிபருடன் மீண்டும் சந்திப்பை திட்டமிடுவதே ஆகும், இந்த சந்திப்பை ஒருங்கிணைக்கும் வேலைகளில் ஏற்கெனவே நாங்கள் ஈடுபட தொடங்கிவிட்டோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    ×