search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Delhi Indira Gandhi International Airport"

    • வெளிநாடுகளில் இருந்து கடத்தல்கள் அதிகரித்து வருகின்றன.
    • 4 பயணிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

    புதுடெல்லி :

    தங்கம் இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதால் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. இதனால் வெளிநாடுகளில் இருந்து கடத்தல்களும் அதிகரித்து வருகின்றன. இவற்றை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் ஒரே நாளில் 8 கிலோவுக்கு மேல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு வழிகளில் அவற்றை பயணிகள் கடத்தி வந்துள்ளனர். தண்ணீர் மோட்டாரில் செம்புச்சுருள் இருக்கும் இடத்தில் தங்கத்தை கட்டியாக வைத்து கடத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இப்படி கண்டுபிடித்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மொத்த மதிப்பு சுமார் ரூ.4 கோடி ஆகும். இது தொடர்பாக 4 பயணிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

    ×