என் மலர்
நீங்கள் தேடியது "Decoration with currency notes"
- சிறப்பு அபிஷேகம் நடந்தது
- அன்னதானமும் வழங்கப்பட்டது
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த பத்தாப்பேட்டையில் உள்ள வெங்கடேச பெருமாள் கோவிலில் 3-வது சனிக்கிழமை முன்னிட்டு மூலவருக்கு மஞ்சள் , குங்குமம், பால், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், விபூதி, சந்தனம், பன்னீர் உள்ளிட்ட நறுமணப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து வெங்கடேச பெருமாளுக்கு மலர் மாலைகள் மற்றும் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுகளை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து கோவில் கோபுரத்தின் மீது விளக்கு ஏற்றப்பட்டது. சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோவில் சார்பில் அன்னதானமும் வழங்கப்பட்டது.






