என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Damodara Perumal temple"

    • விழா நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதங்கள், அன்னதானம் வழங்கப்படுகிறது.
    • விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர், ஊர் பொதுமக்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    காங்கயம்:

    முத்தூர் அருகே உள்ள சக்கரபாளையம் தாமோதர பெருமாள் கோவிலில் புரட்டாசி 4-வது சனிக்கிழமை சிறப்பு அபிஷேகம் நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு நாளை மாலை 5 மணிக்கு மங்கள இசையுடன் விழா தொடங்கப்பட்டு கணபதி ஹோம பூஜை நடைபெறுகிறது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு தாமோதர பெருமாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், திருமஞ்சனம் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, புதிய பட்டாடை உடுத்தப்பட்டு, சிறப்பு மலர் அலங்காரத்துடன், மகா தீபாராதனை பூஜை நடைபெறுகிறது.

    விழா நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதங்கள், அன்னதானம் வழங்கப்படுகிறது. விழாவில் சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொள்கின்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர், ஊர் பொதுமக்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    ×