என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Damage to new bridges"

    • கடந்த 4 மாதங்க ளுக்கு முன்பு போடப்பட்ட கான்கீரிட் மூடியுடன் கூடிய வடிகால் பாலங்கள் சேதம டைந்து ள்ளது.
    • தார்சாலை மற்றும் வடிகாலுக்காக போடப்படும் பாலங்களை தரமானதாக போட வேண்டும் எனவும் உடைந்த பாலங்களை உடனடியாக சரி செய்ய வேண்டும்

    சின்னாளபட்டி:

    சின்னாளபட்டி சிறப்புநிலை பேரூராட்சியில் சுமார் ரூ.6 கோடி மதிப்பில் சின்னாளபட்டி பிரிவிலிருந்து பூஞ்சோலை வழியாக பஸ் நிலையம் வரையில் சாலையின் இருபுறமும் மூடப்பட்ட வடிகாலுடன் சாலையை அகலப்படுத்தும் பணி கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது. இந்த பணி கடந்த ஒரு மாதமாக அசுரவேகத்தில் நடைபெற்று வருகிறது.

    இதனிடையே வடிகால் அமைத்த இடங்களில் கட்டப்பட்ட பாலங்கள் மற்றும் போடப்படும் சாலைகள் தரம் இல்லாமல் இருப்பதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் கூறி வந்தனர். கடந்த 4 மாதங்க ளுக்கு முன்பு போடப்பட்ட கான்கீரிட் மூடியுடன் கூடிய வடிகால் பாலங்கள் சேதம டைந்து ள்ளது. இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், தற்போதைய வளர்ச்சிக்கு ஏற்ப வடிகாலுடன் கூடிய தார் சாலையை அகலப்படுத்தும் பணி நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் தற்போது போட ப்படும் தார் சாலைகள் தரமற்றதாக உள்ளது. வடி காலுக்கு மேலே போட ப்பட்ட பாலங்கள் தரமில்லாமல் உள்ளதால் 4 மாதங்களில் பல இடங்களில் பாலம் உடைந்து விட்டது.

    அந்த தெருகளுக்குள் இனி வாகனங்கள் எப்படி செல்லும் என்பது தெரிய வில்லை.எனவே, தார்சாலை மற்றும் வடிகாலுக்காக போடப்படும் பாலங்களை தரமானதாக போட வேண்டும் எனவும் உடைந்த பாலங்களை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×