search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cycle ride"

    • ‘பிளாஸ்டிக் மறுசுழற்சியை’ வலியுறுத்தி, இந்தியா முழுவதும் சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருகிறேன்.
    • ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக்கால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுகிறது.

    திருவள்ளூர்:

    ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்தவர் குர்ரம் சைதன்யா (22). இவர் பிளாஸ்டிக் மறுசுழற்சி மூலம் பசுமை இந்தியாவை உருவாக்க விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து இந்தியா முழுவதும் 50 ஆயிரம் கிலோ மீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார்.

    இவர் ஆந்திரா மாநிலத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 25-ந்தேதி தொடங்கி கர்நாடக மாநிலம், தமிழகம் வழியாக 3600 கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து திருவள்ளூர் மாவட்டத்திற்கு இன்று வந்தார். அவருக்கு பொது மக்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இது தொடர்பாக குர்ரம் சைதன்யா கூறியதாவது:-

    'மரம் நடுதலை' வலியுறுத்தி, கடந்த ஆண்டு மே முதல் ஜூன் வரை நெல்லூர் முதல் கன்னியாகுமரி வரை சைக்கிள் பயணம் மேற்கொண்டேன். மேலும், அதே ஆண்டில், 'உணவை வீணாக்கக் கூடாது' என்பதை வலியுறுத்தி, நெல்லூரில் இருந்து குஜராத் மாநிலத்தில் உள்ள பாகிஸ்தான் எல்லை வரை சைக்கிள் பயணம் மேற்கொண்டேன்.

    தற்போது, 'பிளாஸ்டிக் மறுசுழற்சியை' வலியுறுத்தி, இந்தியா முழுவதும் சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருகிறேன். ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக்கால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுகிறது.

    அதன் புழக்கம் தவிர்க்க முடியாமல் உள்ள நிலையில் அதை மறுசுழற்சி மூலம் மாசை கட்டுப்படுத்த முடியும். இதை மையமாகக் கொண்டு சைக்கிள் பயணத்தை தொடங்கி உள்ளேன்.

    625 நாட்கள் நடைபெறும் இந்த சைக்கிள் பயணத்தில், ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, கோவா, குஜராத், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 30 மாநிலங்களில் உள்ள 700 மாவட்டங்களில் 50 ஆயிரம் கிலோமீட்டர் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு பயணம் மேற்கொண்டு வருகிறேன்.

    நெல்லூர் சீமப்பொறி மருத்துவமனை அருகே பயணத்தை நிறைவு செய்ய உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×