என் மலர்
நீங்கள் தேடியது "crops loan cancel"
அவனியாபுரம்:
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் மதுரை விமான நிலையத்தில் இன்று நிரூபர்களிடம் கூறியதாவது:-
அந்தியோதயா ரெயில் திருநெல்வேலியில் இருந்து விருதுநகர் வரை இடை நில்லாமல் செல்கிறது. அதை பயணிகள் வசதிக்காக கோவில்பட்டி, சாத்தூர், திருமங்கலம், திருப்பரங்குன்றம் ஆகிய நிறுத்தங்களில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
18 எம்.எல்.ஏ.க்கள் குறித்த உயர்நீதிமன்றத்தின் மாறுபட்ட தீர்ப்பு நீதித்துறை மீது மக்களுக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
3-வது நீதிபதியை உடனடியாக நியமித்து உரிய காலத்தில் இறுதி தீர்ப்பை வழங்க வேண்டும்.
முக்கிய வழக்குகளில் குறிப்பிட்ட காலகெடுவுக்குள் எப்போது, எவ்வளவு கால அவகாசம் என்பதை இறுதி செய்து தீர்ப்பு வழங்க வேண்டும்.
காவிரி விவகாரங்களில் கர்நாடகத்தில் மழை பெய்து தண்ணீர் திறப்பது போல் இயல்பாக மாதந்தோறும் நீர் திறக்க மத்திய அரசை மாநில அரசு வலியுறுத்த வேண்டும்.
காவிரி நீர் விவகாரத்தில் உரிய காலத்தில் நீர் வராததால் வறட்சியால் பாதிக்கப்பட்ட டெல்டா விவசாயிகளின் பயிர் கடனை ரத்து செய்ய வேண்டும். இதற்காக மத்திய அரசு மற்றும் விவசாய அமைச்சகத்திடமும் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #DeltaFarmers #GKVasan






