search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cracker factories"

    • பட்டாசு தொழிற்சாலைகள் பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என காங்கிரஸ் மேற்கு மாவட்ட தலைவர் ரங்கசாமி கூறி உள்ளார்.
    • மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் வலியுறுத்துகிறோம்.

    விருதுநகர்

    விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலை வர் ரங்கசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதா வது:-

    சிவகாசியை அருகே கிச்சனாயக்கம்பட்டி, எம்.புதுப்பட்டி அருகே ரெங்க பாளையம் பகுதிக ளில் நடந்த பட்டாசு ஆலை விபத் துகளில் பெண்கள் உட்பட 14 தொழிலாளர்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந் துள்ளனர். உயிரிழந்த அனைத்து தொழிலாளர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை விருதுநகர் மேற்கு மாவட்டம் காங்கிரஸ் கமிட்டி தெரிவித்துக் கொள்கிறது.

    மேலும் இந்த கொடூர விபத்தில் காயம் அடைந்த வர்கள் வெகு விரைவில் குண மடையவும், அவர்க ளுக்கு உரிய தகுந்த சிகிச்சை அளித்திடவும், உயிரிழந்த தொழிலாளர்கள் குடும்பத் திற்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் இழப்பீடு மற்றும் இலவச வீடு மற்றும் வழங்கி டவும் கேட்டுக்கொள்கி றேன்.

    தமிழக முதல்-அமைச்சர் இதில் கடுமையான நடவடிக் கைகள் எடுத்து இனி இப்படி ஒரு அசம்பாவிதம் நடைபெறாமல் தடுத்து நிறுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்த வர்கள் குடும்பங்களில் ஒரு வருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்.

    மேலும் பட்டாசு நிறு வனம் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கிடவும், விபத்துகள் ஏற்படாத வகையில் பட்டாசு உற்பத்தி நிறுவனங்கள் பாதுகாப்பு விதிமுறைகளை கடுமையாக கடைபிடித்திட அதிகாரிகள் தக்க வகையில் உறுதி செய்ய வேண்டும் எனவும் விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் வலியுறுத்துகிறோம்.

    இவ்வாறு அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    ×