என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Court sensational verdict"

    • கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
    • ரூ.30 கோடி மதிப்புள்ளது

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சிக்கு சொந்தமாக குடியாத்தம் அடுத்த செதுக்கரை விநாயகபுரம் பகுதியில் உள்ள பயணியர் விடுதிக்கு பின்புறம் சுமார் 6 ஏக்கர் இடம் உள்ளது.

    குடியாத்தம் நகராட்சியில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு வீட்டுமனை வழங்கும் திட்டத்தின் கீழ் 1983-ம் ஆண்டு நகராட்சி சார்பில் செதுக்கரை விநாயகபுரம் பகுதியில் உள்ள பயணியர் விடுதி அருகே 6 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது.

    அதில் ஒரு பகுதி நகராட்சி பணியாளர்களுக்காக 63 மனைகளாக பிரிக்கப்பட்டது இதனை தொடர்ந்து 1996 ஆம் ஆண்டு அந்த வீட்டு மனைகளை நகராட்சி பணியாளர்களுக்கு வழங்க தமிழக அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது.மீதியிடம் நகராட்சி பயன்பாட்டிற்காக அப்படியே வைத்துக் கொள்ளப்பட்டது.

    இந்நிலையில் 2008 ஆம் ஆண்டு தனிநபர் ஒருவர் நகராட்சிக்கு சொந்தமான அந்த 6 ஏக்கர் நிலம் தங்களுக்கு சொந்தமானது என குடியாத்தம் மாவட்ட உரிமையியல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் இந்த வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்தது.

    குடியாத்தம் நகராட்சிக்கு சொந்தம் என தீர்ப்பு

    இந்த வழக்கு தொடர்பாக இரு தரப்பு வாதங்களையும் கோர்ட்டு கேட்டு வந்தது. இந்த வழக்கில் நகராட்சி சார்பாக நகராட்சி மற்றும் அரசு வழக்கறிஞர் எஸ்.விஜயகுமார், அரசு வழக்கறிஞர் கே. லோகநாதன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர் நேற்று இந்த வழக்கு சம்பந்தமாக குடியாத்தம் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ராஜநந்திவர்மசிவா அளித்த தீர்ப்பில் இந்த 6 ஏக்கர் இடம் நகராட்சிக்கு சொந்தமானது என தீர்ப்பு வழங்கினார். 15 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில் நேற்று இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

    இந்த தீர்ப்பு வழங்கப்பட்டதை தொடர்ந்து நகராட்சி வழக்கறிஞரும் அரசு வழக்கறிஞருமான எஸ். விஜயகுமாரை குடியாத்தம் நகர் மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன், நகராட்சி ஆணையாளர் ஏ.திருநாவுக்கரசு உள்ளிட்டோர் பாராட்டினார்கள்.

    நகராட்சிக்கு சொந்தமான இடம் என நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்ட அந்த இடம் தற்போதைய நிலவரப்படி சுமார் 30 கோடி ரூபாய் மதிப்புள்ளது என கூறப்படுகிறது.

    ×