search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "court employee arrested"

    தேனி அருகே ஆசிரி யையை காதலித்து விட்டு திருமணத்துக்கு மறுத்த கோர்ட்டு ஊழியர் கைது செய்யப்பட்டார்.

    தேனி:

    தேனி அருகே அரண் மனைப்புதூர் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் சன்னாசி மகள் திவ்யா (வயது 25). தனியார் பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வருகிறார். முல்லை நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆண்டவர் மகன் அரவிந்த் (வயது 24). உத்தமபாளையம் கோர்ட்டில் இளநிலை உதவியாளராக வேலை பார்த்து வருகிறார்.

    இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். திவ்யா திருமணம் செய்ய அரவிந்தை வற்புறுத்தியுள்ளார். ஆனால் அரவிந்த் திருமணத்துக்கு மறுத்து அவரிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த திவ்யா இது குறித்து அரவிந்திடம் தட்டிக் கேட்டுள்ளார். அத்திரமடைந்த அரவிந்த் மற்றும் அவரது நண்பர்கள் வைரமணி, ராஜா ஆகியோர் திவ்யாவுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

    இது குறித்து தேனி அனைத்து மகளிர் போலீசில் திவ்யா புகார் அளித்தார். போலீசார் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து அரவிந்தை கைது செய்தனர்.

    ×