என் மலர்
நீங்கள் தேடியது "Country Poultry Farm"
- 50 சதவிகித மானியம் வழங்கப்படுகிறது
- கலெக்டர் தகவல்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடப்பு ஆண்டிற்கான சிறிய அளவிலான நாட்டுக்கோழி பண்ணைகள் (250 கோழிகள் / அலகு) அமைத்திட 3 அலகுகள் குறியீடாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் பயனாளியாக தேர்ந்தேடுக்க ப்படுபவர்களுக்கு கோழி கொட்டகை கட்டுமான செலவு, உபகரணங்கள் வாங்கும் செலவு மற்றும் நான்கு மாதங்களுக்கு தேவையான தீவன செலவு ஆகியவற்றிக்கான மொத்த செலவில் 50 சதவிகித மானியம் ரூ.1லட்சத்து 50 ஆயிரத்து 625 மாநில அரசால் வழங்கப்படும்.
மீதமுள்ள 50 சதவிகித பங்களிப்பு வங்கி மூலமாகவோ அல்லது தனது சொந்த ஆதாரங்கள் மூலமாகவோ பயனாளிகள் திரட்ட வேண்டும். பயனாளிகள் அதே கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். கோழி கொட்டகை அமைக்க குறைந்தபட்சம் 625 சதுர அடி நிலம் இருக்க வேண்டும். அந்த பகுதி மனித குடியிருப்புகளிலிருந்து விலகி இருக்க வேண்டும். விதவைகள், ஆதரவற்றோர். திருநங்கைகள், மாற்று திறனாளிகள் மற்றும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினத்தவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
விருப்பமுள்ள விவசாயிகள் மற்றும் பொது மக்கள் தங்களது ஆதார் அட்டை நகல், பண்ணை அமையவிருக்கும் இடத்தின் சிட்டா, அடங்கல் நகல், 50 சதவிகித தொகை அளிப்பதற்கான வங்கி இருப்பு விவரம், வங்கி கடன் ஒப்புதல் விவரம், 3 வருடத்திற்கு பண்ணையை பராமரிப்பதற்கான உறுதிமொழி, 2022-23-ம் ஆண்டில் நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் பயனடையவில்லை என்பதற்கான சான்றுடன் விண்ணப்பத்தை அருகில் உள்ள கால்நடை மருந்தகங்களில் வருகிற 26-ந் தேதிக்குள் சமர்பித்திடுமாறு கலெக்டர் வளர்மதி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.






