என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "counting centre"
- ஒவ்வொரு தொகுதியிலும் 1,500 வாக்காளருக்கு ஒரு ஓட்டுச்சாவடி அமைய உள்ளது
- மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரம் முதல்கட்ட சரிபார்ப்பு பணியும் முடிந்துள்ளது
திருப்பூர் :
நாட்டின் 18வது பாராளுமன்ற தேர்தல், அடுத்த ஆண்டு நடக்கிறது. ஒவ்வொரு தொகுதியிலும் 1,500 வாக்காளருக்கு ஒரு ஓட்டுச்சாவடி அமைய உள்ளது. வரும் ஜனவரி மாதம், வாக்காளர் இறுதி பட்டியல் தயாராகிவிடும். நாடு முழுவதும் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரம் முதல்கட்ட சரிபார்ப்பு பணியும் முடிந்துள்ளது.அனைத்து மாநிலங்களிலும் தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை மையங்களை இறுதி செய்ய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
புதிய மாவட்டங்கள் உருவாகியுள்ளதால் அதற்கு ஏற்ப புதிய ஓட்டு எண்ணிக்கை மையம் அமைக்க தேர்தல் கமிஷன் வழிகாட்டியுள்ளது. பாராளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு செய்த பிறகு 2009, 2014, 2019 ஆகிய 3 பொதுத்தேர்தல் நடந்துள்ளது. தமிழகத்தில் புதிய மாவட்டம் உருவாகியுள்ளதால் மாவட்டம் வாரியாக தொகுதிக்கு ஒரு ஓட்டு எண்ணிக்கை மையம் அமைக்க, தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது.
இது குறித்து தேர்தல் பிரிவு அலுவலர்கள் கூறியதாவது:-
பாராளுமன்ற தேர்தல் ஏற்பாடுகளை இந்திய தேர்தல் கமிஷன் துவக்கிவிட்டது. அதன் ஒருபகுதியாக ஓட்டு எண்ணிக்கை மையம் அமையும் இடத்தை உறுதி செய்ய மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டசபை தொகுதிகளுக்கான, ஸ்ட்ராங் ரூம் மற்றும் எண்ணிக்கை மையம் வசதியுடன் ஓட்டு எண்ணிக்கை மையம் அமைக்கப்படும்.மாவட்ட தேர்தல் அலுவலர், மாநகர மற்றும் மாவட்ட போலீசுடன் சென்று கள ஆய்வு நடத்தி, ஓட்டு எண்ணிக்கை மையம் அமைவிடத்தை உறுதி செய்ய வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்