என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Councilor Speech"
- மதுரை அருகே திருமங்கலத்தில் யூனியன் கூட்டம் நடந்தது.
- பள்ளி மேற்கூரை இடிந்து விழும் நிலையில் உள்ளது. மாணவர்கள், ஆசிரியர்கள் அச்சத்துடன் பள்ளிக்கு வந்து செல்கின்றனர்.
திருமங்கலம்
திருமங்கலம் ஊராட்சி ஒன்றியகுழுகூட்டம் தலைவர் லதாஜெகன் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் வளர்மதி அன்பழகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சங்கர்கைலாசம், இளங்கோ முன்னிலை வகித்தனர். கவுன்சிலர் ஆண்டிசாமி பேசுகையில், கரடிக்கல் கிராமத்திலுள்ள கால்நடைமருத்துவமனை சேதமடைந்து உள்ளது.
இதனை இயக்குவதில் சிரமங்கள் உள்ளன என்றார். இதற்கு பதில் அளித்த வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர்கைலாசம் இது குறித்து நேரில் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். கவுன்சிலர் ஓம்ஸ்ரீமுருகன் பேசுகையில், புளியம்பட்டி பஞ்சாயத்து ஊத்துப்பட்டியில் உள்ள அரசு தொடக்க பள்ளி மேற்கூரை இடிந்து விழும் நிலையில் உள்ளது.
மாணவர்கள், ஆசிரியர்கள் அச்சத்துடன் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். மாணவர்களின் நலன்கருதி மேற்கூரையை அகற்றி விட்டு புதியதாக கான்கிரிட் அமைக்க வேண்டும் என்றார். தொடர்ந்து பேசிய அனைத்து கட்சி கவுன்சிலர்களும் மழைக்காலம் தொடங்க உள்ளதால் தொற்றுநோய் பரவாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொசு மருந்து, பிளிச்சிங்பவுடர் அதிகளவில் அடித்து தடுப்பு நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
செக்கானூரணி ஆட்டுசந்தையின் மூலம் யூனியனுக்கு வருவாய் தரக்கூடியது. இதனை விரைவில் ஏலம் விடவேண்டும். இடப்பிரச்சினை உள்ளிட்டவற்றை களைந்து தீர்வு காணவேண்டும் என்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்