search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Councillor Nagajyoti Sidthan"

    • மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கியது போல் எனது வார்டு பகுதிக்கும் செயல்படுத்துவேன் என்று கவுன்சிலர் நாகஜோதி சித்தன் கூறினார்.
    • மாநகராட்சி செய்ய தவறினால் போராட்டம் மூலம் மக்களுக்கு பெற்று தருவேன்.

    மதுரை

    மதுரை மாநகராட்சி 20-வது வார்டில் நிறைவேற் றப்பட்ட திட்டங்கள் குறித்து அ.தி.மு.க. கவுன்சிலர் நாக–ஜோதி சித்தன் கூறியதா–வது:-

    மதுரை மாநகராட்சியின் 20-வது வார்டு கவுன்சில–ராக மட்டுமின்றி, கல்விக் குழு உறுப்பினராகவும் இருக்கிறேன். இந்த வார்டில் 4,200 குடும்பங்களும், 15,000-க்கும் மேற்பட்ட பொதுமக்களும் வசிக்கின் றனர். இந்த வார்டில், மொத் தம் 110 தெருக்கள் உள்ளன.

    பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்கள் வசிக்கும் வார்டாக இது உள்ளது. சாலை ஆக்கிரமிப்பு இருப்ப–தால் தொழில் சார்ந்த மக்கள் மற்றும் தொழிற்சா–லைகள் முழுவதுமாக எங்க–ளது வார்டுக்கு வருவ–தில்லை. மதுரையின் முதன்மை வார்டாக ஆக்கு–வதே எனது லட்சியம் என்ற அடிப்படையில் பணியாற்றி வருகிறேன்.

    பாலமுருகன் நகர் 1-வது, 2-வது தெருவில், ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் 2 தரைப்பாலம், எனது சொந்த செலவில் கட்டி மக்களுக்கு கொடுத்துள் ளேன். எனது வார்டு மக்கள் அவசர தேவைக்கு அடிப் படை பிரச்சினைகளை சரி செய்ய ரூ.2 லட்சம் வைப் புத்தொகை வழங்கி உள் ளேன். தேர்தலின் போது வழங்கிய 30 வாக்குறுதிகளில் ஆரம்ப சுகாதார நிலையம் ரூ.25 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளது.

    ராமமூர்த்தி நகரில் மின் மாற்றி அமைக்கப்பட்டுள் ளது. மேற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் செல்லூர் ராஜூ, நிதியிலிருந்து சொக் கநாதபுரம் தெருவில் கலை–யரங்கம், ராமமூர்த்தி நகர் நியாய விலைக் கடை தற்போது கட்டுவதற்கு பணி–கள் நடந்து வருகிறது.

    மக்கள் அனைவரும் பயன்பெற, அனைத்து அரசு அதிகாரிகள் தொலை–பேசி எண்களும் மக்கள் பார்வைக்கு கொண்டு வந்துள்ளேன். எளிதில் மக் களை தொடர்பு கொள்ள எனது நம்பரை அனைத்து வீடுகளுக்கும் வழங்கப்பட் டுள்ளது. இன்னும் சி.சி.டி.வி. கேமரா, மினரல் வாட்டர், புறக்காவல் நிலை–யம், தார் சாலை, உடற்பயிற்சி கூடம், அம்மா உணவகம் போன்று மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் உணவு வழங்கும் வகையில் கொண்டு வருவதற்கு முயற்சிகள் நடந்து வருகிறது.

    கடந்த மூன்று ஆண்டுக–ளாக விளாங்குடி பகுதியில் மட்டுமல்லாமல் மற்ற பகு–திகளும் இலவச அமரர் ஊர்தியால் 700-க்கும் மேற் பட்ட இறந்த உடல்கள் கொண்டு செல்லப்பட்டுள் ளது. இதன் முலம் நூற்றுக்க–ணக்கான குடும்பங்கள் பயன் பெற்றுள்ளனர்.

    மேலும் காலை 7 மணி முதல் 10 மணி வரை ஒவ் வொரு தெருவிற்கும் சென்று மக்கள் பிரச்சினை–களை ஒவ்வொரு நாளும் கேட்டு சம்பந்தப்பட்ட துறைக்கு மனு அளித்து தீர்வு கண்டு வருகிறோம். முன்னாள் முதல்-அமைச் சர் புரட்சித்தலைவி ஜெயல–லிதா மக்களுக்கு வழங்கிய நலத்திட்டங்கள் போல் எனது வார்டு பகுதிக்கும் செயல்படுத்துவேன்.

    அ.தி.மு.க. வார்டு என்ப–தால் மேயர் மற்றும் ஆணை–யாளர்கள் அதிக கவனம் செலுத்த தயங்குகின்றனர். இந்த சூழ்நிலையில் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி, தனி ஆளாக மக்க–ளுக்கு அடிப்படை பிரச்சி–னைகளை பெற்றுத்தர போராடி உள்ளேன். இது–வரை நடைபெற்ற மதுரை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் சுமார் 14 கூட் டத்தில் கலந்து கொண்டு, 14 கூட்டத்திலும் பல்வேறு மக்கள் பிரச்சினைகளை தீர்வு காண பேசி தீர்வு கண்டுள்ளேன். அன்றும் இன்றும் மக்களுக்கு தேவையை மாநகராட்சி செய்ய தவறினால் போராட் டம் மூலம் மக்களுக்கு பெற்று தருவேன்.

    இவ்வாறு அவர் கூறி–னார்.

    ×