என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Consumer Protection Act"

    • நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் பேசினார்
    • நுகர்வோர் பாதுகாப்பு என்பது ஏழை மற்றும் நடுத்தர மக்களின் பொருளாதார உரிமை

    அரியலூர் :

    தமிழகத்திலேயே முதல்முறையாக உள்ளாட்சி தலைவர்கள், பிரிதிநிகளுக்கான நுகர்வோர் பாதுகாப்பு மாநாடு அரியலூரில் நடைபெற்றது. மாவட்ட வழங்கல் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற்ற இந்த மாநாட்டில் அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் அணையத் தலைவர் ராமராஜ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது: நுகர்வோர் பாதுகாப்பு என்பது ஏழை மற்றும் நடுத்தர மக்களின் பொருளாதார உரிமை. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உற்பத்தி விற்பனை மற்றும் சேவை துறைகள் எவ்வளவு மிக முக்கியமோ அதற்கு இணையான முக்கியத்துவம் வாய்ந்தது நுகர்வோர் பாதுகாப்பு. அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்கள் வழங்கும் கட்டணமில்லா சேவைகளில் ஏற்படும் குறைபாடுகளை தீர்க்கும் வகையில் சேவை உரிமை தீர்ப்பாயங்கள் சட்டத்திருத்தங்கள் மூலம் அமைக்கபடுவது அவசியம். அவை மக்கள் நலனுக்கான முக்கிய திருப்பமாக அமையும். தற்போதைய சூழலில் தேர்தல் ஆணையம் போல், நுகர்வோர் குறைதீர் ஆணையத்துக்கும் அரசியல் சட்ட அந்தஸ்து வழங்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் மாநில அளவிலான திருத்தத்தை மேற்கொள்வதன் மூலம் மாநிலம் முழுவதும் ஊராட்சி மன்ற அளவிலான நுகர்வோர் பாதுகாப்பு குழுக்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கலாம். நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் உள்ள மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் கீழ் பணியாற்ற வழி செய்யலாம். இவ்வாறான மாற்றங்களை செய்வது மூலம் இந்தியாவிலேயே நுகர்வோர் பாதுகாப்பில் முன்னோடி மாநிலமாக தமிழகம் மாறும். இதற்கு மாநில அரசு தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார். இந்நிகழ்ச்சியை அரசு வழக்குரைஞர் கதிரவன் மாநாட்டை தொடக்கி வைத்தார். முன்னதாக மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ரவிச்சந்திரன் வரவேற்றார். முடிவில் ஊராட்சிகள் மற்றும் தணிக்கை துறை உதவி இயக்குநர் நன்றியுரை கூறினார். மாநாட்டில் ஊராட்சி மன்றத் தலைவர்கள், மாவட்ட மற்றும் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.




    ×