என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "construction of toilets."

    • கலெக்டர் ஆய்வு
    • அங்கன்வாடி உணவை சாப்பிட்டு பார்த்தார்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் பேரூராட்சி பகுதியில் உள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் முதல்-அமைச்சர் பொறுப்பேற்ற பின்னர் பெரியார் நினைவு சமத்துவபுரம் புணரமைக்கப்படும் என்று அறிவித்து அதற்கான நிதியிணை ஒதுக்கினார்.

    அதன் அடிப்படையில் அம்மூர் பேரூராட்சி 17 வது வார்டு பகுதியில் உள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் 100 குடியிருப்புகள் உள்ளது.

    இந்த குடியிருப்புகளை சீரமைத்திட ஒரு குடியிருப்புக்கு அதிகபட்சமாக தலா ரூ.50 ஆயிரம் வீட்டின் உரிமையாளரிடம் வழங்கப்பட்டு வீட்டின் சுவர் வர்ணம் பூசுதல் கழிப்பறை கட்டுதல் போன்ற அடிப்படை தேவைகளுக்காக நிதியுதவி வழங்கப்படுகிறது.

    இப்பணிகள் சரியான முறையில் நடைபெற்றுள்ளதா என கலெக்டர் பாஸ்கரன் பாண்டியன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அங்கு கட்டப்பட்டுள்ள சமுதாய கூடத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இச்சமுதாயக் கூடம் தற்போது பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது.

    இதை புணரமைக்க நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டும் என குடியிருப்பு வாசிகள் தெரிவித்தனர். இதில் உள்ள சமையலறை, கழிப்பறை ஆகியவை பழுதடைந்து செடிகள் வளர்ந்து இருப்பதை பார்த்து ஆய்வு செய்தார்.

    பின்னர் மையத்தை சீரமைத்திட பேரூராட்சி பொது நிதியிலிருந்து மேற்கொள்ள உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்படுவதை சாப்பிட்டு பார்த்து உணவின் ருசி சரியாக இல்லை குழந்தைகள் ருசியோடு சாப்பிடும் வகையில் சமையல் செய்யுங்கள் என அங்கன்வாடி பணியாளர்களுக்கு உத்தரவிட்டார்.

    இந்த அங்கன்வாடி மையத்தினையும் பேரூராட்சி பொது நிதியிலிருந்து சீரமைத்திட கலெக்டர் உத்தரவிட்டார்.மேலும் சமத்துவபுரத்தில் சாலை வசதிகள் பூங்காக்கள் சீரமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டார்.

    இந்த ஆய்வின் போது திட்ட இயக்குனர் லோகநாயகி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, பாஸ்கரன், ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள், பேரூராட்சி அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

    ×