என் மலர்
நீங்கள் தேடியது "Conductor no bus service"
கோவை:
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழம் சார்பில் 550 புதிய பஸ் இயக்கத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இதில் 40 பஸ்கள் விரைவு போக்குவரத்து கழகத்திற்கு வழங்கப்பட்டு உள்ளது.
மீதி உள்ள 510 பஸ்கள் பல்வேறு நகரங்களுக்கு இடையே ஒன்டு ஒன் எக்ஸ்பிரஸ் என பல்வேறு பெயர்களில் இயக்கப்பட உள்ளது.
இதில் கோவை கோட்டத்துக்கு 150 பஸ்கள் ஒதுக்கப்பட்டு 90 பஸ்கள் தவிர 60 பஸ்கள் இயக்கத்துக்கு வந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக கோவை கோட்டத்துக்கு உட்பட்ட ஈரோட்டில் இருந்து கோவைக்கு ஈரோ 100 என்ற பெயரில் கண்டக்டர் இல்லாமல் 4 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் புதிதாக வழங்கப்பட்டுள்ள பஸ்களில் கண்டக்டர் இல்லாமல் கோவை-சேலத்துக்கு ஒன்டு ஒன் என்ற பெயரில் 6 புதிய பஸ்கள் இயக்கப்படுகிறது.

இதே போல் தமிழகம் முழுவதும் பல்வேறு வழித் தடங்களில் நகரங்களுக்கு இடையே இயக்கப்பட்ட ஒன்டு ஒன் பஸ்கள் கண்டக்டர் இல்லாமல் இயக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து கோவை கோட்ட போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது-
கோவை கோட்டத்தில் கண்டக்டர் இல்லாமல் 4 பஸ்கள் ஏற்கனவே இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் 6 பஸ்கள் இப்போது இயக்கப்பட்டு உள்ளது. கண்டக்டர் இல்லாமல் செல்லும் பஸ்களில் தானியங்கி கதவு பொருத்தப்பட்டுள்ளது.
டிரைவரின் கட்டுப்பாட்டில் கதவுகள் மூடும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. முன் பக்க கதவு வழியாக மட்டுமே பயணிகள் ஏறி இறங்க முடியும்.
இந்த பஸ்கள் வழியில் எங்கும் நிற்காது. பயணிகள் டிக்கெட் எடுத்தவுடன் பயணிகள் எண்ணிக்கை விவரங்களை டிரைவரிடம் தெரிவித்து விட்டு கண்டக்டர் இறங்கி விடுவார்.
இந்த பஸ்கள் வேறு எந்த இடத்திலும் நிற்காது என்பதால் கண்டக்டரின் அவசியம் இருக்காது.
கோவை கோட்டம் சார்பில் கண்டக்டர் இல்லாமல் ஈரோடு, திருச்சி, மதுரை, உள்பட பல்வேறு நகரங்களுக்கு மேலும் 90 பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கண்டக்டர் இல்லாமல் பஸ்கள் இயக்கப்படுவதற்கு பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கோவையில் இருந்து சேலம் புறப்பட்டு சென்ற பஸ்சில் பயணித்த பயணிகள் கூறும்போது, சாதாரண பஸ்களில் சேலத்துக்கு 4 முதல் நான்கரை மணி நேரம் ஆகும். ஆனால் தற்போது கண்டக்டர் இல்லாமல் இயக்கப்படும் பஸ்களில் 3 மணி நேரத்தில் சென்று விடலாம்.
இதனால் ஒரு மணி நேரம் பயண நேரம் மிச்சம் ஆகிறது என்றனர். #BusConductor
கோவை:
தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகம் கோவை மண்டலம் சார்பில், கோவையில் இருந்து சேலத்துக்கு இடைநிறுத்தம் மற்றும் கண்டக்டர் இல்லாமல் 4 பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது. நேற்று முதல் கூடுதலாக 6 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
பயணிகள் ஏறியவுடன் டிக்கெட் கொடுத்து விட்டு கண்டக்டர் இறங்கிக் கொள்வார். இடையில் எந்த நிறுத்தத்திலும் நிற்காமல் செல்வதால் பயணநேரம் மிச்சமாகும் என அதிகாரிகள் தெரிவித்தனர். கண்டக்டர்கள் இல்லாமல் பஸ்கள் இயக்கப்படுவதற்கு எதிர்ப்புகளும் கிளம்பி உள்ளது.
இதுதொடர்பாக சி.ஐ.டி.யு. தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்க மாநில தலைவர் சவுந்தரராஜன் கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
கண்டக்டர் இல்லாத பஸ் சேவையை ரத்து செய்ய வேண்டும். ‘கண்டக்டர் இல்லாத பஸ் சேவை அடுப்பில்லாமல் சமைப்பதற்கு சமம்’. சிக்கனம் என்ற பெயரில் கண்டக்டர் இல்லாத பஸ் சேவையை அரசு தொடங்கி உள்ளது. ஆனால் இந்த சேவை பயன் அளிக்காது.
கண்டக்டர் இல்லாத பஸ் சேவையை ரத்து செய்ய வலியுறுத்தி சி.ஐ.டி.யு. சங்க ஊழியர்கள் பஸ்களை இயக்குவதற்கு முன்பு கையில் பதாகைகளை ஏந்தி முழக்கங்கள் எழுப்பிய பின்னர் பணிக்கு செல்வார்கள்.
தற்போதைய மோட்டார் வாகன சட்டத்தின்படி கண்டக்டர் இல்லாமல் பஸ்களை இயக்க முடியாது. மத்திய அரசு இந்த திட்டத்தை கொண்டு வந்த போதுபாராளுமன்றத்தில் கடும் எதிர்ப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது. போராட்டங்களில் ஈடுபடுவோர் மீது கடும் அடக்கு முறை பின்பற்றப்படுவதை, தமிழக அரசு கைவிட வேண்டும்.
போக்குவரத்து கழக மானியக் கோரிக்கையில் அரசுப் போக்குவரத்து கழகத்தை மேம்படுத்துவது, ஊழியர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு காண்பது குறித்து அமைச்சர் பேச வில்லை. போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ.5 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.6 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். #BusConductor






