என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Conducted an action test."

    • 13 கிலோ சிக்கியது
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    காட்பாடி வழியாக சென்ற ெரயிலில் கடத்திய 13 கிலோ கஞ்சாவை ெரயில்வே பாதுகாப்பு படைபோலீசார் பறிமுதல் செய்தனர்.

    ெரயில்வே பாதுகாப் புப்படை சென்னை டிவி ஷன்'சீனியர் கமிஷனர் கே.செந்தில், அரக்கோணம் ெரயில்வே பாதுகாப் புப்படை உதவி கமிஷனர் ஏ.கே.பிரீத் உத்தரவின் பேரில் காட்பாடிரயில்வே பாதுகாப்புப்படை உதவி சப் இன்ஸ்பெக்டர் சஜிகு மார்,கோபாலகிருஷ்ணன் ஆகியோர் நேற்று மாலை டாடா நகரில் இருந்து காட்பாடி வழியாக கேரள மாநிலம் எர்ணாகுளம் - செல்லும் எக்ஸ்பிரஸ் ெரயிலில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    ெரயிலின் பொதுப் இதில் பெட்டியில் பயணிகளின் சீட்டின் அடியில் 6 பாலி தீன் பைகள் இருந்ததை கண்டறிந்து அதை சோத னையிட்டபோது, அதில் கஞ்சா பாக்கெட்டுகள் இருந்தது தெரிய வந்தது. இதன் மொத்த எடை 13 கிலோவாகும்.

    இதன் மதிப்பு 72 லட் சத்து 60 ஆயிரம் ஆகும்.இவற்றை கைப்பற்றிய ரயில்வே பாதுகாப்புப்ப டையினர் அதை போதை பொருள்நுண்ணறிவு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    இது பற்றி வேலூர் போதை பொருள் நுண் ணறிவு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    ×