என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Complaints about autos obstructing traffic"

    • போலீசார் கடும் எச்சரிக்கை
    • ஆட்டோ டிரைவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது

    வேலூர்:

    வேலூர் மாநகராட்சி பகுதியில் 58-இடங்களில் ஆட்டோ ஸ்டேண்ட் உள்ளன. சுமார் 3000 ஆட்டோக்கள் ஓடுகின்றன. சில ஆட்டோக்கள் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதாக புகார் வந்தது.

    இதனைத் தொடர்ந்து ஆட்டோக்களை ஒழுங்கு படுத்துவதற்காக ஆட்டோ டிரைவர்கள் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் வரவேற்று பேசினார்.

    கூட்டத்தில் இன்ஸ்பெக்டர் முத்து குமார் கலந்து கொண்டு பேசியதாவது:- வேலூர் மாநகரப் பகுதியில் போக்கு வரத்திற்கு இடையூறாக சில ஆட்டோ டிரைவர்கள் நடுரோட்டில் வாகனத்தை நிறுத்தி ஆட்களை ஏற்றி செல்வதாக தொடர்ந்து புகார் வருகிறது.

    இவ்வாறு நடந்து கொள்ளும் போது சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதனால் வேலைக்கு செல்பவர்கள் நேர்முகத் தேர்வுக்கு செல்வர்கள் பாதிக்கப்படுவார்கள். ரெயில்களை பிடிக்க செல்பவர்கள் அதனை விடவும் வாய்ப்பு உள்ளது. இது போன்ற வற்றிற்கு நீங்கள் காரணமாக கூடாது.உங்களை ஏன் நீங்களே திருத்திக்கொள்ள கூடாது. மற்றவர்கள் சொல்லி தான் கேட்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

    போலீசார் அபராதம் விதித்தால் உங்களுக்கு கஷ்டம் ஏற்படுவதாக கூறுகிறீர்கள். அதனால் உங்களை நீங்களே முறைப்படுத்திக் கொள்ள வேண்டும். சாலை விதிகளை முழுமையாக ஆட்டோ டிரைவர்கள் கடைபிடிக்க வேண்டும்.

    குடித்துவிட்டு ஆட்டோ ஓட்டும் டிரைவர்களை விடவே மாட்டோம். அதேபோல் வெளியூர் ஆட்டோக்களை கொண்டு வந்து வேலூரில் ஒட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களிடம் ஆட்டோ டிரைவர்கள் கனிவாக நடந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு ஆட்டோ டிரைவரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க முன்னுதாரணமாக திகழ வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    ×