என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Commencement ceremony in the temple"

    • யானை லட்சுமிக்கு சிறப்பு பூஜை நடந்தது
    • 5-ந்தேதி காலையில் தீர்த்தவாரி நடக்கிறது

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த படவேடு ரேணுகாம்பாள் கோயிலுடன் இணைந்த யோகராமச்சந்திரசுவாமி கோயிலில் ராமநவமி பிரமோற்சவம் நேற்று தொடங்கியது. 6-ந் ்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

    இதைமுன்னிட்டு நேற்று 27ம்தேதி மாலை கோவில் யானை லட்சுமிக்கு் ரேணுகாம்பாள் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. அங்குரார்ப்பணத்துடன், இன்று காலை 6 மணிக்குள் கொடியேற்றப்பட்டது.

    அதையடுத்து சாமி ஊர்வலம் நடந்தது. தினமும் மாலையில் ஊஞ்சல் சேவை நடக்கிறது. தொடர்ந்து 5-ந்தேதி காலையில் தீர்த்தவாரியுடன், பகல் 10.30 மணிமுதல் 12மணிக்குள் சாமி திருக்கல்யாணம் உற்சவம் நடக்கிறது.

    பகல் 1 மணியளவில் பக்தர்கள் சார்பில் திருமண விழா அன்னதானம் உற்சவ மண்டபத்தில் நடக்கிறது. 6-ந் தேதி காலை அன்னக்கூடை, திருப்பாவாடை உற்சவமும், மாலை 7.15 மணிக்கு த்வஜா அவரோகணம் விடைசாதித்தல் நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை படவேடு யோகராமர் கோவில் உதவி ஆணையர் ஜோதிலட்சுமி, செயல் அலுவலர் சிவஞானம் மற்றும் குழுவினர் செய்து வருகின்றனர்.

    ×