search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "College Day"

    • பயிற்சிகளை மாணவ, மாணவிகள் முறையாக பயன்படுத்திக்கொண்டு எதிர் காலங்களில் நல்ல வேலை வாய்ப்பை பெற்று பயன்பெறலாம்.
    • நீங்கள் முடிவெடுக்கும் இடத்திற்கு வந்துவிடுவீர்கள் அதன் மூலம் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும்

    தாராபுரம்,ஜூலை. 5-

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் என்.சின்னசாமி நகரவை மேல்நிலைப்ப ள்ளியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்வுக்கு படி உயர் கல்வி வழிகாட்டல் முகாம் நடைபெற்றது. முகாமை கலெக்டர் கிறிஸ்துராஜ் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    அரசு பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்பு குறித்து விழிப்புணர்வையும், வழிகாட்டு தலையும் அளிப்பது தான் நான் முதல்வன் திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும். இதில் மாணவர்களுக்கான உதவித்தொகை, நுழைவு த்தேர்வு, கல்விக்கடன் அதற்கு தேவையான ஆவணங்கள், படிப்பு முடித்த பின்னர் அரசால் நடத்தப்படும் போட்டித்தேர்வு களும் அதற்கான அணுகுமுறைகளும், இலவச பயிற்சி மையங்கள் போன்றவை குறித்த விபரங்கள் உள்ளிட்ட பிற தகவல்களை தெரிந்து கொள்ளும் வகையில் இது போன்ற முகாம்கள் நடத்தப்படுகிறது. அனைவரும் கட்டாயம் கல்லூரி படிப்பில் சேர வேண்டும். அதற்கு உங்களுக்கு ஏதாவது தடை இருப்பின் உடனடியாக எங்களிடம் தெரிவித்து தீர்வு காணலாம். பயிற்சிகளை மாணவ, மாணவிகள் முறையாக பயன்படுத்திக்கொண்டு எதிர் காலங்களில் நல்ல வேலை வாய்ப்பை பெற்று பயன்பெறலாம். கல்லூரி காலங்களில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அனைவரும் உயர்ந்த பொறுப்பிற்கு வரவேண்டும். கல்லூரி படிப்பை முடித்துவிட்டு மிகப்பெரிய பொறுப்புகளை அடைய வேண்டும். இன்னும் நான்கு ஐந்து ஆண்டுகளில் மாணவ,மாணவிகளாகிய நீங்கள் முடிவெடுக்கும் இடத்திற்கு வந்துவிடுவீர்கள் அதன் மூலம் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றார்.

    நிகழ்ச்சியில் நான் முதல்வன் திட்டத்தின் விழிப்புணர்வு கையேடுகள் மற்றும் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் கையேடுகள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கினர். மேலும் தென்மேற்கு பருவமழை மாதிரி ஒத்திகை மற்றும் விழிப்புணர்வு பயிற்சி கொடுத்த கையேடுகளை வெளியிட்டனர். அதனைத்ெதாடர்ந்து தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக தாராபுரம் வட்டம், சித்தாரவுத்த ன்பாளையம் ஊராட்சியில் பழங்குடியினர் நலம் - நரிக்குறவர் இன மக்களுக்கான கோட்ட அளவிலான குறைதீர்க்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இக்குறைதீர்க்கும் சிறப்பு முகாமில் பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு சம்பந்தப்பட்ட துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து அப்பகுதி மக்களுக்கு எடுத்துரைத்து நரிக்குறவர் இன மக்களிடம் பல்வேறு கோரிக்கை மனுக்க ளை பெற்றுக் கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

    இந்நிகழ்ச்சியில் தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில் அரசு, உயர்கல்வி வழிகாட்டி சிறப்பு ஆலோசகர் (பாராதியார் பல்கலைக்கழகம்) மீனாட்சி, உதவி ஆணையர் (கலால்) ராம்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி, மாவட்ட சமூக நலஅலுவலர் ரஞ்சிதாதேவி, முன்னோடி வங்கி மேலாளர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×