search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Collector Rahul Nath"

    • அனைத்து மருந்து கடைகளிலும் வருகிற 31-ந்தேதிக்குள் குற்றவியல் நடைமுறை சட்டம் 1973 பிரிவு 133-ன் கீழ் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்.
    • உத்தரவினை பின்பற்றாத காரணத்தினால் மருந்து கடைகளின் உரிமையாளரின் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தால் 29-9-2023 அன்று இணைய வழியில் நடைபெற்ற கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டதன் அடிப்படையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் மருந்துகள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் சட்டம் 1940 மற்றும் விதிகள் 1945-ல் அட்டவணைகள் எச், எச் ஒன், எக்ஸில் (H, H1, X) குறிப்பிட்டுள்ளதன் அடிப்படையில், மருந்துகள் விற்பனை செய்யும் அனைத்து மருந்து கடைகளிலும் வருகிற 31-ந்தேதிக்குள் குற்றவியல் நடைமுறை சட்டம் 1973 பிரிவு 133-ன் கீழ் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்.

    மேலும், மருந்து கட்டுப்பாட்டு அலுவலர் அல்லது மருந்து ஆய்வாளர் ஆய்வின் போது கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படாமல் இருப்பது கண்டறியப்பட்டால், இந்த உத்தரவினை பின்பற்றாத காரணத்தினால் மருந்து கடைகளின் உரிமையாளரின் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • செங்கல்பட்டு மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளை பராமரிப்பதாக பல இல்லங்களை தொண்டு நிறுவனங்கள் நடத்தி வருகின்றன.
    • தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் செங்கல்பட்டு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை அணுகி அதற்கான விண்ணப்பங்களை பெறலாம்.

    செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    செங்கல்பட்டு மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளை பராமரிப்பதாக பல இல்லங்களை தொண்டு நிறுவனங்கள் நடத்தி வருகின்றன. உடல் ரீதியாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளோ அல்லது மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளோ பராமரிக்கப்பட்டு வருகிற அத்தகைய இல்லங்கள் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில், மாற்றுத்திறனாளிகள் உரிமைச்சட்டம் 2016-ன் கீழ் பதிவு செய்யவேண்டும்.

    மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு வகையான உதவிகளை வழங்கி அவர்களுக்கு சேவை புரிந்து வரும் தொண்டு நிறுவனங்களும், மாற்றுத்திறனாளிகளுக்கான பயிற்சிகளை நடத்தி வரும் நிறுவனங்களும், சிறப்புபள்ளிகளும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் மாற்றுத்திறனாளிகள் உரிமைச்சட்டம் 2016-இன் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டியது கட்டாயமாகும்.

    அவ்வாறு இதுவரை பதிவு செய்யாத தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் செங்கல்பட்டு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை அணுகி அதற்கான விண்ணப்பங்களை பெறலாம். மேலும் மாற்றுத்திறனாளிகள் தொடர்பான சேவைகளை செய்துவரும் பதிவு செய்யப்பட்டாத நிறுவனங்கள், இல்லங்கள், சிறப்பு பள்ளிகள் மீது மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டம் 2016-இன் படி சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×